http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 32

இதழ் 32
[ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தேமதுரத் தமிழோசை
பழுவூர் - 13
தளிச்சேரிக் கல்வெட்டு - வினாக்களும் விளக்கங்களும்
திரும்பிப் பார்க்கிறோம் - 4
சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 2
சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 2
Links of the Month
சங்கச்சாரல் - 15
இதழ் எண். 32 > கலைக்கோவன் பக்கம்
கோதண்டன் தப்பிலிதர்மன்

பழுவேட்டரையன் கோதண்டன் தப்பிலிதர்மனைக் குறிக்கும் கல்வெட்டு உடையார்குடி அனந்தேசுவரசாமி கோயிலில் காணப்படுகிறது. பரகேசரிவர்மனின் இரண்டாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு அரிஞ்சயனுடையதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பேராசிரியர் கோவிந்தசாமி இப்பரகேசரியை அடையாளம் காண்பது இயலாத செயலென்று எழுதியுள்ளார். கோயிலுக்கு நேரே சென்று பார்த்தால் இது இயலக்கூடியதே என்று பேராசிரியர் கருதியிருக்கக்கூடும். அரிஞ்சயன் காலத்ததான இக்கல்வெட்டால் கோயில் கருவறையினுள் ஒரு நந்தா விளக்கெரிக்கத் தப்பிலிதர்மன் கொடையளித்த செய்தியை அறிகிறோம். கோதண்டன் என்ற பெயர் இராசாதித்தனைக் குறிக்கும் கோதண்டராமன் என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் சிலர் கருதுகிறார்கள்.

இக்கோதண்டன் தப்பிலிதர்மனும், திருப்பாலைத் துறை ஆதிமூலேசுவரர் திருக்கோயிலில் உள்ல இரண்டு கல்வெட்டுகள் கட்டும் தப்பில்தரம் பல்லவரையனான கீழ்மாந்தூர் பருவூரும் ஒருவரே என்று திரு. ஜி. வி. சீனிவாசராவ் கருதுகிறார். இது பிழையான கருத்தாகும். 'பல்லவரையன்' என்ற பெயரே அவர் பழுவேட்டரையர் மரபைச் சேர்ந்தவரல்லர் என்பதை மிகத்தெளிவாகச் சுட்டும் போது 'தப்பில்தரம்' என்ற பெயர் ஒற்றுமை ஒன்று கொண்டு இரு வேறுபட்ட மனிதர்களை ஒருவராக்க முனைவது தவறாகும்.

உடையார்குடிக் கல்வெட்டு குறிக்கும் பழுவேட்டரையன் கோதண்டன் தப்பிலிதர்மன் ஐயத்திற்கிடமின்றிப் பழுவூர் மரபைச் சேர்ந்தவர்தாம் என்றாலும் அவரைப் பழுவூர் அரியணையை அலங்கரித்தவராகக் கருத இடமில்லை. ஏனென்றால் பழுவூர் அரியணையேறிய அத்தனை மன்னர்களும் தங்கள் இயற்பெயருக்கு முன்னால் தத்தம் தந்தையின் இயற்பெயரைக் கொண்டிருந்தார்கள். இதைப் பல கல்வெட்டுகளால் மெய்ப்பிக்கலாம். குமரன் மறவனும் குமரன் கண்டனும் தங்கள் தந்தையின் குமரன் என்ற பெயரைத் தங்கள் பெயர்களுக்கு முன்னால் கொண்டிருந்தார்கள். கண்டன் அமுதன் தம் தந்தையான குமரன் கண்டனின் பெயரைத் தம் பெயருக்கு முன்னால் கொண்டிருந்தார். இந்தப் பழக்கம் இம்மரபின் இறுதி மன்னரான கண்டன் மறவன் வரை தொடர்கிறது. எனவே இந்த மரபுவழிப் புழக்கத்தில் நுழையாத பழுவேட்டரையன் கோதண்டன் தப்பிலிதர்மனை அரியணையேறிய அரசராகவோ, பழுவூர் மரபின் நேர் வாரிசாகவோ கொள்வது முறையாகாது. பழுவூர் மரபின் கிளைவழி வந்தவராகவே கொள்ள வேண்டும். இத்தப்பிலிதர்மன் இராசாத்திதனிடம் பணியாற்றிய பெருமக்களுள் ஒருவராக இருந்திருக்கலாம். அதனாற்றான் இராசாதிட்தனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றான 'கோதண்டன்' என்ற பெயரைத் தம் பெயருடன் இணைத்துக் கொண்டார் போலும்.

அரச வழியில் வராத இத்தபிதர்மனைக் கண்டன் அமுதனின் முன்னோடியாகப், பழுவூர் மரபின் முதல் தோன்றலாகக் காண்கிறார் பேராசிரியர் கொவிந்தசாமி. முதலாம் பராந்தகன் காலத்துக் கண்டன் அமுதனுக்கு, அரிஞ்சயன் காலத்துத் தப்பிலிதர்மன் எப்படி முன்னோடியாக முடியும்? திரு. ஜி. வி. சீனிவாசராவும், திரு. தியாகராசனும் கண்டன் அமுதனைத் தொடர்ந்து அரசுக் கட்டிலேறியவராய்த் தப்பிலிதர்மனைக் கொள்வதும் பொருந்திவரவில்லை. டாக்டர் பாலாம்பாள் அமுதனையடுத்து தேவனாரும், தேவனாரையடுத்து இத்தப்பிலிதர்மனும் ஆட்சிக்கு வந்ததாகக் கற்பனையிழைகளைப் பின்னிப் பார்ப்பதும் பொருத்தமாக்த் தெரியவிலை. திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் இத்திப்பிலிதர்மன் மறவன் கண்டனைப் பின்பற்றீ ஆட்சிக்கு வந்தவர் என்கிறார். அரிஞ்சயன் காலத்தில் வாழ்ந்தவர் எப்படி உத்தம சோழன் காலத்தில் ஆட்சிக்கு வரமுடியும்? மேலும், அரிஞ்சயன் காலத்தில் வாழ்ந்த இவர் ஆட்சிக்கு வராமல், சுந்தர சோழன் காலத்து மறவன் கண்டன் ஏன் முன்கூட்டியே அரசுக் கட்டிலேற வேண்டும்? தப்பிலிதர்மனைக் குறிக்கும் பரகெசரியின் கல்வெட்டு அரிஞ்சயனுடையதல்ல, உத்தம சோழனுடையது என்று கொண்டாலும் கூட, உத்தம சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் பழுவூர், மறவன் கண்டனின் ஆட்சியில் இருந்ததற்கான அசைக்க முடியாத சான்றுகள் இருக்கையில் தப்பிலிதர்மன் எப்படி மன்னராகத் திகழ்ந்திருக்க முடியும்? எப்படிப் பார்த்தாலும் முறை பொருந்தாத இக்கருத்தினைத் திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் ஏன் கொண்டார் என்பதற்கான காரணமே விளங்கவில்லை.

திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியத்தாலும், திரு. தியாகராசனாலும் குறிக்கப்பெறும் பழுவேட்டரையன் விக்கிரமாத்திதன், உத்தம சோழனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றால் அறிமுகம் பெறுகிறார். இப்பெருமானின் மனைவியார் காமன் கோவியார் ஆல்ந்துறையார் கோயிலுக்குத் தந்த கொடையை இக்கல்வெட்டு சுட்டுகிறது. இவ்விக்கிரமாத்தித்தன் பழுவூர் அரசமரபின் நேர்வழியைச் சேர்ந்தவரல்ல என்பது அவரது பெயரிலேயே அறியக் கிடக்கிறது. தப்பிலிதர்மனைப் போல பழுவூர் மரபின் கிளைவழியில் வந்தவராக இவரைக் கொள்ளலாம். அரியணையே ஏறாத நிலையில், விக்கிரமாத்தித்தன் அரசாண்டதாகத் திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியமும், தியாகராசனும் கூறுவது பொருந்தவில்லை. ஒரு வாதத்திற்காக விக்கிரமாத்தித்தன் அரியணையேறியதாய்க் கொண்டாலும் உத்தமசோழனின் எட்டாம் ஆட்சியாண்டில் வெளிப்படும் இவரெப்படி சுந்தரசோழனின் ஐந்தாம் ஆட்சியாண்டிலிருந்து பழுவூரை ஆண்டுகொண்டிருந்த மறவன் கண்டனுக்கு முன்னோடியாக முடியும்? மேலும் உத்தமசோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுவரை பழுவூர், மறவன் கண்டனின் ஆட்சியிலிருந்ததையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆக, எந்நிலையில் பார்த்தாலும் திரு. எஸ். பாலசுப்பிரமணியமும், திரு. தியாகராசனும் கூறுவது சரியல்ல என்பது தெளிவாய்ப் புலப்படுகிறது.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.