http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > தலையங்கம்
மணிவிழா நாயகர்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த சில மாதங்களைப் போலவே இந்தமாத இதழும் சற்று தாமதமாகவே வெளிவருகிறது. சென்றமாத இதழ்கள் தாமதமானதற்கும் இந்தமாத இதழ் தாமதமாவதற்கும் காரணங்கள் வேறு வேறு. கடந்த மாதங்களில் ஏதாவது ஒரு கட்டுரை தயாராகத் தாமதமாகிவிட்டதால் இதழ்களும் தாமதமாக வெளியாகின. இந்தமாதம் எல்லாக் கட்டுரைகளும் 15ம் தேதியே எழுதி முடிக்கப்பட்டு, ஒரு முக்கிய நிகழ்வின்போது இதழ் வெளியிடப்படுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தன. அத்தகைய சிறப்பு நிகழ்வு என்னவென்று இத்தலையங்கத்தின் தலைப்பையும் முகப்புப் பக்கப் படத்தையும் பார்த்தவுடனே ஊகித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆம். முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களின் மணிவிழா ஆண்டு இது. ஏப்ரல் 20ம் தேதி மாலை அவரது இல்லத்தில் நடைபெறும் அவரது பிறந்தநாள்விழாவில் டாக்டரின் கையால் வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு டாக்டர்.மா.இராசமாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டாக அமைந்ததும், இந்த ஆண்டு அவர் பெயரால் இயங்கும் வரலாற்றாய்வு மையத்தின் வெள்ளிவிழா ஆண்டும் அம்மையத்தின் இயக்குனரின் மணிவிழா ஆண்டும் ஒன்றாக அமைவதும் ஒரு சிறப்பான ஒற்றுமை.

சில வாரங்களுக்கு முன் டாக்டர் கலைக்கோவனின் புதல்வி செல்வி. குந்தவி அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு, தாம் ஏற்பாடு செய்திருக்கும் பிறந்தநாள் விழாவில் தம் பெற்றோருக்கு அளிப்பதற்காக, டாக்டருடன் பணியாற்றிய அனைவரின் வாழ்த்துச் செய்திகளையும் தொகுத்துக் கொண்டிருப்பதாகவும், அதற்கு எங்கள் குழுவினரின் வாழ்த்துக்களும் வேண்டும் எனவும் கூறியவுடன், எங்கள் அனைவரின் மனதிலும் தோன்றிய எண்ணம்தான் இச்சிறப்பிதழ். இது ஏதோ நாங்கள் அனைவரும் கலந்துபேசி எடுத்த முடிவன்று. குந்தவியின் மடலைப் பார்த்ததும் அனைவருக்கும் ஒரேநேரத்தில் ஒரே கோணத்தில் சிந்தித்திருக்கிறோம் என்பதுதான் இச்சிறப்பிதழின் சிறப்பு. நம்புவதற்குச் சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரே அலைவரிசையில் சிந்திப்பதுதான் எங்கள் குழுவின் தனித்தன்மையும்கூட.

வரலாற்று ஆய்வு மற்றும் வரலாறு.காம் சிறப்பிதழ் பற்றிய எந்த ஒரு முக்கியத் தகவலையும் முனைவர் கலைக்கோவன் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் இதுவரை இருந்ததில்லை. குறைந்தபட்சம் ஒரு தகவலாகவாவது அவரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இம்முறை அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கவேண்டும் என்று முடிவுசெய்ததனால் இதை இரகசியமாகவே வைத்திருந்தோம். அவரிடம் கற்றுக்கொண்ட விதத்தைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகவே இதைக் கருதுகிறோம். ஒருவேளை முன்பே தெரிவித்து, அவர் வேண்டாம் என்று மறுத்திருந்தால் அதை மீற எங்களுக்கு விருப்பம் இருந்திருக்காது. சில அரிய தகவல்களும் பதிவு செய்யப்படாமலே போயிருக்கும் என்பதும் ஒரு காரணம்.

2003 ஜனவரி 27 அன்று அவருடன் முதன்முதலில் தொலைபேசியில் பேசியது முதல் இன்றுவரை எங்கள் மனதில் குடிகொண்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். சிறப்பிதழ்ப் பகுதியின் கட்டுரைகளை நாங்கள் அனைவரும் தனித்தனியாக எழுதி முடித்த பிறகே ஒருவருக்கொருவர் கட்டுரைகளைப் படித்துப் பார்த்துக்கொண்டோம். எனவே, ஒரே விஷயம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளில் சொல்லப்பட்டிருப்பதைத் திருத்த முயலவில்லை. அவற்றை அவரவர் பார்வையில் எழுதப்பட்டதாக இருக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டோம். இதுவரை வரலாறு.காம் இதழில் எழுதியிருப்பவர்களில் பெரும்பாலானோர் இச்சிறப்பிதழுக்குப் பங்களித்திருந்தாலும், இன்னும் எழுத்தில் வடிக்க இயலாத சில ஆளுமைப்பண்புகள் அவரிடம் உள்ளன. அவருடன் நேரில் பழகியவர்களே அதைப் புரிந்துகொள்ள முடியும். இதுவரை எங்களையோ டாக்டரையோ சந்தித்திராதவர்கள் சில நிகழ்வுகளை அல்லது தகவல்களைப் படிக்கும்போது, சற்று மிகைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கருதலாம். ஆனால் மிகைப்படுத்தவேண்டும் என்று நாங்கள் யாரும் எண்ணவில்லை. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. நடந்ததை எங்கள் மனதில் பட்டபடி பதிவு செய்திருக்கிறோம். டாக்டரை அறிந்தவர்கள் இதை உணர்வார்கள்.

இச்சிறப்பிதழைப் பற்றி மேலும் மேலும் விளக்கிக் கொண்டிருப்பதைவிட, கட்டுரைகள் மூலம் வாசகர்களே அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். எனவே, வரலாறு.காம் வாசகர்கள் சார்பாக டாக்டருக்கு மணிவிழா மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு, தலையங்கத்தை முடித்துக் கொள்கிறோம். இனி, வாசகர்களும் சிறப்புக் கட்டுரைகளும். அப்படியே டாக்டரின் புகைப்படத் தொகுப்பும்.

அன்புடன்
ஆசிரியர்குழு

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.