http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 49

இதழ் 49
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாம் ஆண்டை நோக்கி...
வாள் நிறுத்தி வணங்கும் இணையர்
திரும்பிப் பார்க்கிறோம் - 21
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 3
காதல் எதிரிகள் - சில நிகழ்வுகள்
Virtual Tour On Kundrandar Koil - 1
Airavati - Preview of Mahadevan Section
Airavati - Preview of Tamil Section
Airavati - Preview of English Section
அவர் - மூன்றாம் பாகம்
Silpis Corner (Series)
Silpi's Corner-05
திருமணம் = இராமன்?!
இதழ் எண். 49 > சுடச்சுட
வாள் நிறுத்தி வணங்கும் இணையர்
மு. நளினி
ஜூன் மாதம் 29ம் நாள் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் குடைவரைக்குச் சென்றிருந்திருந்தேன். கழுக்குன்றின் மேற்பகுதியில் வெட்டப்பட்டுள்ள இக்குடைவரையை அடைய கணக்கற்ற படிகள் ஏறிச்செல்லவேண்டும். படிகளைக் கொடையளித்தவர் பெயர்கள் பக்கச்சுவர்களில் இடம்பெற்றுள்ளன.மாலை வெயிலில் மூச்சிரைக்கப் படியேறிய எங்களுக்கு, அந்தப் படிவரிசையில் பளிச்சிட்ட இரண்டு சிற்பங்கள் புத்துயிர் அளித்தன. ஒரு சிற்பம் பாதி வழியிலுள்ள படியொன்றிலும் மற்றொரு சிற்பம் குடைவரைக்கு ஏகும் வழியிலும் உள்ளன. இரண்டு சிற்பங்களுமே குறிப்பிடத்தக்கவைதான்.

முதல் சிற்பம் ஒரு முதியவரைப் படம்பிடிக்கிறது. தாடியுடன் அமர்ந்திருக்கும் அப்பெரியவரின் அமர்நிலையே சிற்பத்தின் சிறப்பாகும். தவிசு ஒன்றின்மீது அமர்ந்திருக்கும் அவரது அமர்நிலை இயல்பானதாவோ, எளிதானதாகவோ இல்லை. இடக்காலை முழங்காலளவில் மடித்துப் பின்னால் நீட்டியிருப்பவர், வலக்காலையும் முழங்காலளவு மடித்து அந்த இடக்காலின் மீது இருத்தியிருக்கிறார். இடப்பாதம் திரும்பியுள்ள விதம் நோக்கத்தக்கது. மக்களால் பல்லாண்டுகளாய் மிதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும் அவருடைய முகத்தில் தெளிவில்லை. விரல்கள் விரிந்த நிலையில் வலக்கையை உயர்த்தி உள்ளங்கையைக் குழித்துள்ள நிலை, "ஏற்கும்" நிலையில் அவர் இருப்பதைக் காட்டுகிறது. இடக்கையைத் தொடையில் வைத்துள்ளார். அந்த இடக்கையின் அமர்வுகூட இயல்பான நிலையில் இல்லாமல் மாறுபட்டு இருப்பதை நோக்கலாம். இடச்சாய்வில் முகம் கொண்டுள்ள அவரது தலையைச் சடைச் சுருள்கள் அலங்கரிப்பது போல் தோன்றுகிறது. வாழ்ந்த வாழ்க்கை அறுவடை செய்திருக்கும் அவலத்தின் சுமைகளைத் தேய்ந்திருக்கும் நிலையிலும் அவர் முகம் வெளிச்சப்படுத்துகிறது.



மற்றொரு சிற்பம் இறைவனைத் தரை தழுவி வணங்கும் இணையரைப் படம்பிடித்துள்ளது. இந்த இணையில் ஆடவர் வலப்புறமும் அவர் துணைவியார் இடப்புறமுமாய்ப் படுத்துள்ளனர். ஆடவரின் வலப்புறம் அவருடைய தகுதியையும் வீரத்தையும் குறிக்குமாறு பெருவாள் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. வாளின் தோற்றமே, விழுந்து வணங்கியிருப்பவர் சிற்றரசராகவாவது இருந்திருத்தல் வேண்டும் என்பதை நிறுவுகிறது. அரசரின் இடையில் முழங்கால் வரை உயர்த்திக்கட்டிய ஆடை. நீட்டியிருக்கும் வலக்கால் மேல் இடக்காலின் பாதம் படர்ந்துள்ளது. கைகள் தலைக்கு மேல் நீண்டு குவிந்து இறைவனை வணங்கும் நிலையில் உள்ளன. நீள்செவிகளில் செவிப்பூ மட்டுமே உள்ளது. தலையைச் சுற்றிலும் உருத்திராக்கமாலையைப் பார்க்கமுடிகிறது. இடுப்பில் குறுவாளொன்று காட்சிதருகிறது.



சிற்றரசரின் இடப்புறம் அவரைப் போலவே தரை தழுவி இறைவனை வணங்கும் அவரது அரசியின் இடையாடை கணுக்கால்வரை நீண்டுள்ளது. இடையின் பின்புறம் முந்தானை காட்டப்பட்டுள்ளது. தலையின் வலப்புறம் முடிந்த கொண்டை தனித்துத் தெரிய, கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி இறைவனை வணங்கும் அம்மையின் முகம் இடப்புறம் திரும்பியுள்ளது.

இது போல் இறை வணைங்கும் நிலையில் தம்மைப் படைத்துக்கொண்டு பெருமக்களைச் சில கோயில்களில் காணமுடிந்தாலும், சிற்றரசர் நிலையில் வாள் நிறுத்தி வணங்கும் இணையரை இதுகாறும் கண்டதில்லை. வாதாபி கொண்ட வேந்தரான முதலாம் நரசிம்மவர்மரின் ஒரே கல்வெட்டைக் கொண்டிருக்கும் கழுக்குன்றம் குடைவரையைக் காணச் சென்ற கண்களுக்கு மக்கள் மிதித்து அழித்துக் கொண்டிருக்கம் இந்த இரண்டு சிற்பங்களும் பெருவிருந்தாக விளைந்தன. தேடும் கண்களுக்கு இந்த நாட்டில் எங்குதான் கலையில்லை!
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.