http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 51

இதழ் 51
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு கொடுக்கும் பாடங்கள்
காவற்காட்டு இழுவை!
தொட்டான்! பட்டான்!
திரும்பிப் பார்க்கிறோம் - 23
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 5
Virtual Tour On Kundrandar Koil - 3
அவர் - ஐந்தாம் பாகம்
கடமை... முயற்சி... பெருமிதம்... நெகிழ்வு...
மான்விழியே!! அள்ளும் அழகே!!
சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!
இதழ் எண். 51 > சுடச்சுட
தொட்டான்! பட்டான்!
மு. நளினி

மதுரை அருள்மிகு சொக்கனாதர் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களுள் ஒன்றில் பழங்காலத் தண்டனை முறையொன்றைச் சிற்பமாகக் காணமுடிந்தது. மூன்று நிகழ்வுகளின் கூட்டிணைவாகப் படைக்கப்பட்டிருக்கும் இச்சிற்பம் நாயக்கர் காலச் செதுக்கலாகும்.

கீழ்ப்பகுதியில் ஓர் இளம் பெண் இடஒருக்களிப்பில் சாய்ந்திருக்கிறார். அவரது கைகள் மார்பகங்களை மறைக்க முயலுமாறு மடிந்துள்ளன. அவருக்குப் பின் நிற்கும் ஆடவர் கீழுள்ள பெண்ணின் இடுப்பிற்குக் கீழ்ப்பட்ட பகுதியில் தம்முடைய வலக்காலை அழுத்தியவாறு அப்பெண்ணிடம் முறைதவறி நடக்கும் முயற்சியில் முனைந்துள்ளார்.

இந்த இருவருக்கும் பின்னால் நிற்கும் காவலர் வலப்புறம் முடிச்சிடப்பட்ட தொப்பி போன்ற நாயக்கர் காலத் தலைப்பாகை அணிந்திருக்கிறார். செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். கழுத்தில் சரப்பளி. கைகளில் கங்கணங்கள். மார்பில் சன்னவீரம் காட்சியளிக்கிறது. தம் வலக்கையிலுள்ள கத்தி போன்ற கருவியால் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் ஆடவரின் பின்பகுதியில் குத்தியவாறே, இடக்கையால், அந்த ஆடவரின் வலக்கையைப் பற்றி அவரைத் தாக்க முயற்சிக்கும் காவலர், அக்காலத்துக் காவல் அமைப்பைக் கண் முன் நிறுத்துகிறார்.





இந்தக் காட்சிக்கு மேலே தண்டனைக் கூடம். சட்டகமொன்றின் பக்கப்பகுதியில் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்ட நிலையில் முறைதவறி நடந்த ஆடவர் கட்டப்பட்டுள்ளார். கூடத்தின் மேற்பலகையில் கயிறுகளால் வளையமிட்ட நிலையில் அசையாதவாறு அவர் தலையும் பிணைக்கப்பட்டுள்ளது. ஆடைகளற்ற நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவருடைய பிறப்புறுப்பை விலங்கொன்று கடித்தவாறுள்ளது. இந்த விலங்கு நாயாக இருக்கலாம்.

பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கும் ஆடவர்களுக்கு நாயக்கர் காலத்தில் ஊர்க்காவல் அளித்த கடுமையான தண்டனையை இந்தச் சிற்பம் பதிவுசெய்துள்ளமை வரலாற்றுக்குப் புதிய வரவாகும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.