http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 51

இதழ் 51
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு கொடுக்கும் பாடங்கள்
காவற்காட்டு இழுவை!
தொட்டான்! பட்டான்!
திரும்பிப் பார்க்கிறோம் - 23
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 5
Virtual Tour On Kundrandar Koil - 3
அவர் - ஐந்தாம் பாகம்
கடமை... முயற்சி... பெருமிதம்... நெகிழ்வு...
மான்விழியே!! அள்ளும் அழகே!!
சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!
இதழ் எண். 51 > இலக்கியச் சுவை
மான்விழியே!! அள்ளும் அழகே!!
ரிஷியா

கரிய மசியினால் எழுதினவையோ அந்த அழகிய விழிகள். மருள மருள ஒரு மிரட்சியோடு, ஒரு படபடப்போடு நோக்கும் கள்ளமில்லாப் பார்வைகள். பார்வையில் கள்ளம் இல்லாமையால்தானோ என்னவோ உயிரணைய காதலிலும், உயர் அன்பிலும் கள்ளமில்லை. விழிகள்தானே உள்ளமதின் கண்ணாடி!!

மான்விழிகள்! மானின் விழியழகை ரசிக்காத, வருணிக்காத இலக்கியக் கவிகளே கிடையாது.

"மானமர் கண்ணாய்" (ஐந்திணை 50-13)

"பிணையேர் மடநோக்கும்" (திருக்குறள் 9-109)

"விழிகட் பேதையோடு (நற்றிணை 242)

மேலே குறிப்பிடப்படும் நற்றிணைப் பாடல் சற்றே மாறுப்பட்டது. பெண் மானின் விழியை வருணிக்காது, முல்லைக் கவி எழிலார்ந்த மான்மறியின் விழியழகை மேற்கண்டவாறு விழிகட்பேதை என்று சுவைபட கூறுகிறார். இனி முல்லைத்திணையின் அந்த ஒரு அழகிய நெஞ்சை அள்ளும் நிகழ்வை காண்போம்.

"இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை, வல் விரைந்து
செல்க - பாக! நின் தேரே! உவக்காண் -
கழிப் பெயர் களரில் போகிய மடமான்
விழிக்கட் பேதையொடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடுஉ நின்ற இரலை ஏறே".

-242 (நற்றிணை விழிகட்) பேதைப் பெருங்கண்ணனார்.

விளக்கம்


இலைகள் யாவும் உதிர்ந்துபோன பிடவமரம் இனிய மலர்கள் கொண்டு அரும்ப, புதரில் முல்லைக் கொடிகள் மூடிய தம் இதழ்களை நெகிழ்ந்து திறக்க, பொன் எனக் கொன்றைப் பூக்கள் பொன்மலராய் மலர, நீலமணி எனப் பல மலர்களைக் கொண்ட காயாம்பூக்கள் சிறுகிளைகளில் நெருங்கிப் பூக்க, மேகங்கள் மழை பெய்யத் தொடங்கும் கார் காலை இது. மிக விரைந்து செலுத்துக பாக! நின் தேரை!

இவன் அணித்தே நோக்குக - விட்டுப் பெயர்ந்து செல்லுகின்ற களர்நிலத்தில் பெண்மான் மருட்சியைப் புலப்படுத்துகின்ற கண்களையுடைய தன் இளமான் குட்டியுடன் தன்னுடைய மான் கூட்டத்தினின்று பிரிந்து விலக, விருப்பமிக்க மனத்தோடு தன் பெண்மானையும் இளங்குட்டியையும் தேடுகின்ற முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண்மானைப் பார் என்று வினைமுற்றி மறுத்தரா நின்ற தலைமகன் கார்கண்டு பாகற்குச் சொல்கிறான்.

மிக்க இளமையுடைய மான்மறி, மருள மருள மருட்சியோடு நோக்கும் பார்வை கொண்டு திகழ, தன் இனத்திற்குரிய மருட்சி முழுவதும் தன் அழகிய இருவிழிகளில் புலப்படுத்த, இதனைக் கூர்ந்து அவதானித்த புலவர் மான் மறியினை விழிகட்பேதை என்று புதுமையாக வருணிக்க, இதை ஓட்டியே புலவருக்கு விழிகட்பேதைப் பெருங்கண்ணனார் என்று காரணப்பெயர் மாண்புற அமைந்துவிட்டது.

பொருள்வினை அல்லது போர்வினை முடித்து மீண்டும் வருகின்ற தலைவன் ஆண்மான் பெண்மானையுங் குட்டியையும் தேடுகின்ற நிலையைக் காட்டித் தான் தன் காதலியையும் புதல்வனையும் விரைந்து காணவேண்டும் என்ற தன் ஆவலைக் குறிப்பாகப் பாகனுக்கு உணர்த்துக்கின்றான்.

மான்விழிகளுக்குப் புதுவிளக்கம் கொடுத்த அந்தப் புலவர் யாரோ! அவர்தம் நிஜப்பெயர்தான் என்னவோ!! ஆனால் அவர் கொடுத்த புதுமையான நயத்தக்க வர்ணிப்பே அவர்தம் பெயராக நிலைபெற்றுவிட்டது, சங்க இலக்கிய நந்தவனத்தில்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.