http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 63

இதழ் 63
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பார்வைகளைப் பண்படுத்தும் பயணங்கள்
மதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்
மதுரகவி நந்தவனம் அழித்தொழிப்பு - ஒரு வேண்டுகோள்
கல்வெட்டுக்கள் காட்டும் நந்தவனங்கள்
திருநந்திக்கரைக் குடைவரை
கழுகுமலைப் பயணக்கடிதம் - 4
அன்பே! நீயின்றி
இதழ் எண். 63 > இலக்கியச் சுவை
அன்பே! நீயின்றி
ரிஷியா


அங்கே பிள்ளைகளின் கொஞ்சும் கிள்ளைமொழிகள் கேட்கவில்லை. இளமங்கையரின் பாதசரங்கள் ஒலிக்கவில்லை. வம்புபேசும் முதியோர்கள் இல்லை. செல்லப்பிராணிகள் எதுவுமில்லை. முற்றத்தில் கோலமில்லை. மகிழ்ச்சிக்குரிய எந்த ஆரவாரமுமில்லை.

ஒரேயொரு அணில் மட்டும் அந்த முற்றத்தில் குதித்து ஓடி விளையாடுகிறது. அந்த அணிலுக்கும் தனிமைதான் துணையோ! இந்த அணில் ஓடி விளையாடும் முற்றத்து வீடு போல நான் அவன் பிரிந்த அன்றே களையற்று, பொலிவிழந்து, குதூகலமற்று வருந்துகிறேன், தோழி!

என்று மீண்டும் வருவான் அந்தப் பூமாறன்? உள்ளத்தைக் களவாடிய கள்ளன். அழகான சிற்றூர், அதில் வாழும் குடிகள் எத்தனை மிகுந்த மகிழ்ச்சியுடன், ஆரவாரத்துடன் வாழ்வார்கள்? அதுபோன்றே, அவன் என்னுடன் இருந்தபொழுது என் மகிழ்ச்சி எல்லை கடந்திருந்ததே. விழாக்கோலம் பூண்ட பேரூர் போல உள்ளம் கூத்தாடியதே, இப்பொழுது தனிமை சூழ்ந்த பாழ்மனைபோலப் பொலிவிழந்து விட்டேன். தோழி!

இந்தக் குறுந்தொகைப் படப்பிடிப்பு, பாலைநிலத்தில் நிகழ்கிறது. இனிப் பாடலைக் காண்போம்.

பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது

காதலர் உழையர் ஆகப்பெரிது உவந்து,
சாறுகொள் ஊரின் புகல்வேள் மன்ற;
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்று
அலுப்பேன் தோழி! அவர் அகன்ற ஞான்றே

குறுந்தொகை : 41
திணை : பாலை
ஆசிரியர் : அணிலாடு முன்றிலார்

விளக்கம் :
காதலர் நம் அருகில் உள்ளபோது, பெரிதும் மகிழ்வுற்று, விழாக்கண்ட பேரூர் போல மிகவும் விருப்பத்தையுடையவளாக விளங்குவேன். பாலை நிலத்தில், அழகிய குடிகளையுடைய சிற்றூரில் உறைவோர் அனைவரும் அவ்வூரைவிட்டு நீங்கிச் சென்றபோது அங்குள்ள அணில் விளையாடும் முற்றத்தையுடைய தனிமை பொருந்திய வீட்டினைப்போல, அவர் என்னைப் பிரிந்த அன்றே பொலிவிழந்து வருந்துவேன், தோழி!

மக்கள் நீங்கிய இல்லத்தை, "அணில் ஆடு முன்றில்' என உவமித்துப் பாடினமையால் இப்புலவர் பெருமான், 'அணிலாடு முன்றிலார்" என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அணில்கள் இயல்பு - ஆள் அரவமற்ற தனிமையான இடங்களில் ஓடி விளையாடும் இதை உன்னித்துக் கவனித்த சங்கக்கவி, தனிம்மையான பாழ்மனையை அணில் ஆடும் முன்றில் எனச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

அவர்தம் சொற்திறமும் கவித்திறமும் அவருக்குப் புதுப்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.

நவில்தோறும் நூல்நயம் போலச் சுவைதருகின்றது இந்தச் சிறப்பான சொற்றொடர். சங்கக்கவிக்கு ஈடில்லை யாரும் சொல்ல.

அருஞ்சொற்பொருள்:

1. உழையர் - அருகில் உள்ளவர்
2. சாறு - விழா
3. அத்தம் - பாலைவழி
4. அலப்பேன் - வருந்துவேன்
5. புலப்பில் - தனிமையான இல்லம்
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.