http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 63

இதழ் 63
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பார்வைகளைப் பண்படுத்தும் பயணங்கள்
மதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்
மதுரகவி நந்தவனம் அழித்தொழிப்பு - ஒரு வேண்டுகோள்
கல்வெட்டுக்கள் காட்டும் நந்தவனங்கள்
திருநந்திக்கரைக் குடைவரை
கழுகுமலைப் பயணக்கடிதம் - 4
அன்பே! நீயின்றி
இதழ் எண். 63 > சுடச்சுட
மதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்
கோகுல் சேஷாத்ரி
மதுரகவி நந்தவனம் தொடர்பாக அக்டோபர் 01 -2009 அன்று தினமலர் நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான மதுரகவி நந்தவனத்தை நந்தவனமாகவே பராமரிக்கவேண்டும் என்பதற்காக உலகளாவிய வைணவ தர்மரக்ஷண சபையின் தலைவர் திரு. கோவிந்த இராமானுஜ தாசர் என்பவர் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.

இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்களுக்கான நமது எதிர்வினை.

* செய்தியில் விருந்தினர் விடுதி ஏற்னனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் டிரஸ்ட் ஒன்றிற்குச் சொந்தமான மதுரகவி நந்தவனத்தை தேவஸ்தானம் இனி எடுத்துக்கொள்ளும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜுலை 31 - 2009 அன்றுதான் ஆணை பிறப்பித்துள்ளார். அப்படியிருக்க, அதற்குள் அங்கு விடுதிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதா என்ன? அப்படியெனில் யாருடைய அனுமதியின் பேரில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன?

* விருந்தினர் விடுதி கட்டுவது ஆகம விதிகளுக்குப் புறம்பானதென்றும் நந்தவனத்தில் பிரம்மச்சாரிகள் தங்கியிருப்பதால் பெண்கள் அங்கு வந்து போவது தடையாக இருக்குமென்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. இதனைத் தவிர வேறு எந்தக் காரணங்களும் சுட்டப்பட்டதாகத் தெரியவில்லை.
- மதுரகவியவர்கள் எந்த நோக்கத்திற்காக அந்த நந்தவனம் அமைத்தார் என்பதைப் பற்றியோ
- அதன் நோக்கங்கள் என்னென்ன என்பதை மிகத் தெளிவாகத் தனது உயிலில் வரையறை செய்துள்ளார் என்பதைப் பற்றியோ
- அவரது நோக்கங்களுக்குப் புறம்பாக வேறு வழிவகைகளில் நந்தவன நிலங்களை உபயோகிப்பது அவரது உணர்வுகளுக்கு நாம் புரியும் இழுக்கு என்பதைப் பற்றியோ
- தமிழகத்திலேயே கல்வெட்டு ஆதாரத்துடன் பண்டைய திருநந்தவனக்குடி மரபின் எச்சமாகத் திகழும் ஒரே நந்தவனம் மதுரகவி நந்தவனம்தான் என்பதைப் பற்றியோ
- திருநந்தவனக்குடி ஒருவருக்காக அமைக்கப்பட்டுள்ள சமாதிக் கோயில் கொண்டு விளங்கும் ஒரே நந்தவனம் மதுரகவி நந்தவனம் மட்டும்தான் என்பதைப் பற்றியோ மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகின்றது.

வைணவ ஆகம நோக்கில் மட்டும் இந்த விவகாரத்தை அணுகாமல் பன்முக நோக்கிலும் முக்கியத்துவம் பெற்றுத் திகழும் மதுரகவி நந்தவன விவகாரத்தை வெவ்வேறு கோணங்களில் நாம் அணுகவேண்டும்.

* மதுரகவி நந்தவன டிரஸ்டின் நோக்கங்களை மிகமிகத் தெளிவாக மதுரகவிப் பிள்ளையவர்கள் தெளிவாக்கியிருக்கிறார். அதன் முக்கிய நோக்கங்களாவன
- இறைவன், இறைவி, மற்றும் முக்கிய தெய்வங்களுக்கு தினமும் - வருடம் முழுவதும் - மாலைகள் கட்டித் தருதல். அதாவது திருவரங்கத் திருக்கோயிலில் இடம்பெற்றுள்ள முக்கிய தெய்வங்கள் அனைத்திற்கும் அனைத்து நாட்களிலும் - விசேஷ நாட்கள் மற்றும் உற்சவ நாட்கள் உட்பட - மதுரகவி நந்தவனத்திலிருந்தே மாலைகள் மலர்கள் செல்ல வேண்டும்.
- தினமும் பெருமாள் மற்றும் தாயாருக்கு உறுகாய் தயாரிப்பதற்கான மாங்காய்களைத் தருதல்
- விசாக தினத்தன்று பால்மாங்காய் தருதல்
- ஜேஷ்டாபிஷேகத்திற்கான (குடமுழுக்குக்களின்போது) மாங்காங்களும் இதரக் கனிகளும் தருதல்.

இந்த நான்கு நோக்கங்களுமே நந்தவனம் தொடர்பாக அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோக்கங்களை நன்முறையில் நிறைவேற்றுவதற்கு நந்தவன நிலங்கள் பயன்பட வேண்டுமேயன்றி விடுதிகள் கட்டுவதற்கும் இதர நோக்கங்களிலும் அது பயன்படுத்தப்பட்டு அதன் சூழ்நிலை அழிக்கப்படக்கூடாது என்பதுதான் எமது கோரிக்கை. மதுரகவி நந்தவன நிலத்தில் ஒரு சிறு பகுதிகூட அவர் குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்கு அப்பாற்பட்டுச் செல்லக்கூடாது. அது நியாயமாகாது.

* தனியார் வசம் இதுநாள் வரை இருந்து நன்முறையில் செயல்பட்ட நந்தவனம் அரங்கநாதர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமாவதே தவறானது எனும் மிக முக்கியமான கருத்தை மனுதாரர் வலியுறுத்தத் தவறிவிட்டார் என்றே தெரிகிறது. நந்தவனத்தை அழித்துவிட்டு அங்கு விடுதிக்கட்டிடங்களும் பணியாளர் விடுதிகளும் கட்ட வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திடம் நந்தவனத்தைக் கொடுத்தல் தகுமா? தற்போதைய அரசாணை 2009 ஜூலையில் வெளியிடப்பட்டிருக்க, 2007ம் ஆண்டிலேயே இந்த இடத்தை ஆக்கிரமிப்பது பற்றித் தேவஸ்தானத்தார் பேட்டி கொடுத்துள்ளனர்.

பழையபடி அது தனியார் டிரஸ்டாக - இதுவரை நன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருந்ததைப் போலவே இனியும் செயல்படவேண்டும். டிரஸ்டில் தற்போது இடம்பெற்றிருப்பதைப் போலவே தொடர்ந்து அரங்கநாதர் திருக்கோயில் தேவஸ்தான போர்டின் மெம்பர்களும் இடம்பெற்று உரியபடி இத்திருப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். அத்துடன் பொதுநல நோக்கில் அறிஞர்களையும் வரலாற்றாய்வாளர்களையும் மதுரகவி நந்தவன டிரஸ்டில் இணைத்து இத்திருப்பணிக்கு எதிர்காலத்தில் எந்த விதத்திலும் பங்கம் வராமல் பாதுகாகக்க வேண்டும் என்பதே எமது அவா. வேண்டுகோள். விண்ணப்பம். பிரார்த்தனை.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.