![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 75
![]() இதழ் 75 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
திருவண்ணாமலை மாவட்டம் தேசூருக்கு அருகிலுள்ள திரைக்கோயில் என்னும் சிற்றூரில் காணப்படும் குன்றின் கிழக்கு முகத்தில் குடைவரை முயற்சியைக் காணமுடிகிறது.1 முகப்பளவிற்கே உருவாகியுள்ள இக்குடைவரை நிலத்தில் இருந்து 1. 68 மீ. உயரத்தில் வெட்டப்பட்டுள்ளது. தென்வடலாக 4. 98 மீ. நீளம், கிழக்கு மேற்காக 28 செ. மீ. அகலம் கொண்டு அமைந்துள்ள முகப்பின் உயரம் 2. 02 மீ. நடுப்பகுதியில் இரண்டும் பாறைச் சுவர்களை ஒட்டிப் பக்கத்திற்கு ஒன்றுமாக நான்கு நான்முக அரைத்தூண்கள் உருவாகியுள்ளன. நடுத் தூண்கள் பின்சுவரில் இருந்து விடுபடாமையின் அரைத்தூண்களாகவே காட்சி தருகின்றன. தூண்களின் மீதுள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம். அரைத்தூண்களை ஒட்டி விரியும் பக்கச்சுவர்கள் தெற்கில் 11 செ. மீ. அகலத்திலும் வடக்கில் 13 செ. மீ. அகலத்திலும் அமைந்துள்ளன. அவற்றுள் வடசுவர் கீழ்ப்பகுதியில் சிதைந்துள்ளது.2 ![]() திரைக்கோயிலில் இக்குன்றருகே தென்புறத்தில் அமைந்துள்ள நெடும்பாறையில் நான்கு திசைகளிலும் திசைக்கொன்றhக நான்கு தீர்த்தங்கரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பார்சுவரை மட்டுமே அடையாளப்படுத்த முடிகிறது. பாறையின் கீழ்ப்பகுதியில் சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ![]() இப்பாறையை ஒட்டியுள்ள குன்றில் வர்த்தமானேசுவரம், திகம்பர ஜினாலயம் எனும் பெயர்களில் அமைந்த இரண்டு கட்டுமானச் சமணக் கோயில்கள் உள்ளன. அவற்றுள் மேலுள்ள கோயில் பெரிதும் சிதைந்துள்ளது. ஒரு தள வேசரமாக உள்ள கீழ்க்கோயிலின் முன்மண்டபத் தூண்கள் இரண்டில் அவற்றைத் தந்த அருமொழி தேவபுரத்து இடையாறன் ஆட்கொண்டான் மாவீரன் பெயர் வெட்டப்பட்டுள்ளது.3 இக்கோயிலை அடையும் வழியில் உள்ள மலைப்பாறை ஒன்றிலும் இன்னாரென அடையாளப்படுத்த முடியாத தீர்த்தங்கரர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 1. ஆய்வு நாள்: 3. 10. 2010. இக்குடைவரை முயற்சியை அறியச் சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி ஆகியோரின் தமிழ் நாட்டுக் குடைவரைக் கோயில்கள் நூல் உதவியது. ப. 92. குடைவரையைக் காணத் துணை நின்ற வேலூர் ஆவின் பாலக மேலாண் இயக்குநர் மருத்துவர் திரு. எஸ். சுந்தரேசன் நன்றிக்குரியவர். 2. சான்றுகளே இல்லாத நிலையிலும் சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் இக்குடைவரை சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். ப. 92. 3. இக்கல்வெட்டுகள் களஆய்வின்போது அறியப்பட்டவை. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |