http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 100

இதழ் 100
[ அக்டோபர் 2013] நூறாவது இதழ்


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
காஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு
இராமனை அறிதல்
Thirumeyyam - 6
Chola Ramayana 09
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1
தேடலில் தெறித்தவை - 7
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
ஆலக்கோயில் அமைந்த திருக்கச்சூர்
மீண்டெழுந்த சோழர் பெருநாள்
வரலாற்றின் தூண்டலில்...
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்
பாதையில் கால்கள் பதியுமுன்..
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 4
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
இதழ் எண். 100 > கலையும் ஆய்வும்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
மா.இராசமாணிக்கனார்
உத்தமச் சோழப் பல்லவராயர்

இப்பட்டம் சேக்கிழார்க்கு அரசன் தந்தான் என்று சேக்கிழார் புராண ஆசிரியர்கள் குறித்தனர்.

சோழர் அரசியலில் பலவகைத் துறைகளிலும் தலைவர்களாக இருந்தவர் - படைத்தலைவர் நாட்டுடைத் தலைவர், நாட்டை அளக்கும் தலைவர், திருமந்திர ஓலை நாயகம், உடன் கூட்டத்து அதிகாரிகள் முதலியவர் 'மூவேந்த வேளான், காலிங்கராயன், கேரளராசன், தொண்டையன், வாணகோவரையன், பல்லவராயன், இளங்கோவேள், காடவராயன், கச்சிராயன், சேதிராயன், விழுப்பரையன்' முதலிய பட்டங்கள் அரசரால் வழங்கப் பெற்றனர் (47). எனவே சேக்கிழார் அமைச்சுத் துறையில் முதன்மையாக இருந்தமையால் 'உத்தமச் சோழப் பல்லவராயர்' என்ற பட்டத்தைப் பெற்றனர் எனக்கோடல் பொருந்தும்.

சோழ நாட்டுத் திருநாகேச்சரம்

சோழநாட்டுத் திருநாகேச்சுரத்தில் சேக்கிழார், அவர் தம்பி பாலறாவாயர், அவர் தாயார் ஆகிய மூவர் உருவச் சிலைகள் இன்றும் இருக்கின்றன. அவை சேக்கிழார் அமைச்சராக இருந்தபொழுது அத்திருநாகேச்சரத்தில் பேரன்பு கொண்டிருந்தார் என்று சேக்கிழார் புராணம் செப்புகின்றதை உறுதிப்படுத்துகின்றன எனக்கோடல் தவறாகாது.

குன்றத்தூர்த் திருநாகேச்சரம்

சேக்கிழார், சோழ நாட்டுத் திருநாகேச்சரத்தைப் போன்றதொரு கோவிலைத் தம் குன்றத்தூரில் கட்டி அதற்கு அப்பெயரிட்டார் என்று சேக்கிழார் புராணம் கூறுகின்றது. குன்றத்தூர்த் திருநாகேச்சரம் என்ற கோவிலில் உள்ள 44 கல்வெட்டுக்களைக் காணின் (48) அவற்றில் பழமையானவை இரண்டாம் குலோத்துங்கன் காலத்தனவேயாகும் என்பதை அறியலாம். அக்கோவிலில் சேக்கிழார்க்குத் தனிக்கோவில் இருக்கின்றது.சேக்கிழார் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அக்கோவிலுக்குச் சிறப்பாகச் சேக்கிழார் மரபினரே தானங்கள் செய்தனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவை அனைத்தையும் நோக்கச் சேக்கிழார் சோழ நாட்டுத் திருநாகேச்சரத்தை நினைவிற்கொண்டு தம் ஊரில் இக்கோயிலைக் கட்டியிருக்கலாம் என்று கோடல் பொருத்தமே ஆகும்.

சேக்கிழார் மரபினர்

சேக்கிழார் புராண ஆசிரியர் சேக்கிழார் காலம் முதல் இன்றுவரை அம்மரபினர் அரசர்பால் சிறப்புற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார்(49). அவர் கூற்று மெய் என்பதை நாம் முன்று காட்டிய சேக்கிழார் பெயர்ப் பட்டியல் உறுதிப்படுத்தலைக் காணலாம்(1). இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் சேக்கிழார் காலத்தவனான இரண்டாம் குலோத்துங்கன் காலம் முதலே காணக்கிடைக்கின்றன(2). அவருக்குப் பின்னும் அம்மரபினர் சோழப்பேர ரசில் சிறப்புற்றிருந்தனர் என்பது மேற்சொன்ன பட்டியலைக் கொண்டே பாங்குற உணரலாம்.

முடிவுரை

இதுகாறும் நடத்திய ஆராய்ச்சியில் போந்த செய்திகளாவன;

1.சேக்கிழார் தொண்டை மண்டலம் - புலியூர்க் கோட்டம் - குன்றத்தூர் வளநாட்டுக் குன்றத்தூரினர். வேளாளர். சேக்கிழார் குடியினர். அவரது இயற்பெயர் இராமதேவன் என்பதாகலாம். அவர் தம்பி பாலறாவாயர்.

2. சேக்கிழார் காலத்து அரசன் அநபாயன் என்ற சிறப்புப் பெயர்கொண்ட இரண்டாம் குலோத்துங்கன். சேக்கிழார் அவனுடைய முதல் அமைச்சர் ஆகலாம். அவர் தம்பி உத்தமச் சோழப் பல்லவராயர் என்ற பட்டம் பெற்றவர். இளவரசன் இரண்டாம் இராசராசனிடம் நெருங்கிப் பழகியவர் ஆகலாம். (50)

3. சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் மிகுந்த பக்தி பூண்டவர். ஆதலால் அவர் அதற்கு அறிகுறியாகத் தமது ஊரில் திருநாகேச்சரம் என்ற பெயரால் கோயில் எடுப்பித்திருக்கலாம்.

4. சேக்கிழாருடைய சைவ சமயப் பற்றும் நாயன்மார் வரலாறு அறியவும் சிறந்த தமிழ்ப் புலமையுடைய அநபாயன் அவரைப் பெரிய புராணம் பாடச் செய்திருக்கலாம். அல்லது, இவற்றை இளவரசனான இரண்டாம் இராசராசன் வாயிலாக உணர்ந்து அநபாயன் சேக்கிழாரைப் பெரிய புராணம் பாடச் செய்து சிறப்பளித்திருக்கலாம். சீவக சிந்தாமணி பற்றி எழுந்த்து பெரிய புராணம் என்ற கூற்று பொருத்தமற்றது.

5. சேக்கிழாருக்குப் பின் அவர் தம்பி பாலறாவாயர் சோழர் அரசியலில் உய்வடைந்திருக்கலாம். சேக்கிழார் இரண்டாம் இராசராசன் காலத்திலும் (கி.பி.1152) உயிருடன் இருந்தவர்.

6. பெரிய புராணத்தில் பற்றுக்கொண்ட இரண்டாம் இராசராசன் தான் கட்டிய இராசராசேச்சரம் முலத்தானப் புறச்சுவர்களில் ஆயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகளைச் சிற்பங்களாகச் செதுக்குவித்தான் போலும்.

7. சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணமே இரண்டாம் இராசராசன் காலத்தில் (ஏறத்தாழக் கி.பி.1174ல்) திருவொற்றியூர்க்க கோவிலில் நடந்த பங்குனி உத்திரத்திருவிழாவில் படிக்கப்பட்டதாகலாம்.

8.சேக்கிழார் புராண ஆசிரியர் சைவ சமய ஆசாரியராகிய புகழ்பெற்ற உமாபதி சிவாச்சாரியார் என்னல் பொருந்தாது. அதனை எழுதியவர் இவரின் வேறானவர். ஆயினும் அவர் கூறும் சேக்கிழார் பற்றிய செய்திகள் பெரும்பாலும் கல்வெட்டாராய்ச்சிக்குப் பொருந்துவனவாக இருந்த தால் அவர் சேக்கிழார் வரலாறு நாட்டில் நன்றாகப் பரவியிருந்த காலத்தவர். உமாபதி சிவத்திற்கு முற்பட்டவர் எனலாம்.

(1) Thiruthondar Purana Varalaru, S.98
(2) Ibid. S.24
(48) Ins.187 to 230 of 1929-30
(49) 194, 198, 199,222 of 1929-30
(50) S.102this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.