http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > கதைநேரம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
லலிதாராம்
சமீபத்தில் வந்த 'நியூ' என்ற படம், மக்களிடையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் இரட்டை அர்த்த (பல சமயங்களில் ஒரே 'அசிங்கமான' அர்த்தம்) வசனங்கள் நிறைந்திருப்பதாலும், ஆபாசக் காட்சிகள் நிறைந்திருப்பதாலும், அப்படத்தைத் தடை செய்யக் கோரி வழக்கு கூடத் தொடரப்பட்டது. இந்நிலையில், விஜய் டி.வி-யில் தன்னிலை விளக்கம் அளிக்கிறேன் பேர்வழி என்று அவர் அளித்த பேட்டி நகைப்புக்குரியதோடு மட்டுமன்றி கண்டனத்துக்குரியதும் ஆகும்.

'நியூ' என்பது ஒரு கண்ணாடியைப் போன்ற படம் என்று சூர்யா கூறுவதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், அது அவர் கூறுவது போன்று பார்ப்பவரைப் பிரதிபலிக்கும் ரசம் பூசப்பட்ட கண்ணாடியன்று. உள்ளே இருப்பதையெல்லாம் ஒளிவு மறைவில்லாமல் காட்டும் 'see-through' கண்ணாடி என்பதே உண்மை. 'நியூ' படம் பார்ப்பவருக்கு ஆபாசமாகத் தெரிந்தால், அது படத்திலுள்ள குறையே அன்றி பார்ப்பவர் கண்ணில் இருக்கும் பழுதினாலன்று. எத்தனையோ படங்கள் ஆபாசக் காட்சிகளுடன் வருகின்றன. அதற்கெல்லாம் கண்டனம் தெரிவிப்பது varalaaru.com-இன் வேலை அல்ல. இப்படத்திற்கான வக்காலத்தில் சரித்திரத்தை வம்புக்கிழுப்பதால்தான் இக்கண்டனம்.

'எனது படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள், தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் மேலாடை இல்லாத சிற்பங்களையும், ஆண்-பெண் உறவைச் சித்தரிக்கும் சிற்பங்களையும் முதலில் விலக்கிவிட்ட பிறகு என் படத்தைப் பற்றி பேசுங்கள்' என்ற அதிபுத்திசாலித்தனமான வாதத்தையும் எடுத்து வைக்கிறார்.

அவர் கூறுவதைக் கேட்கையில், ஒரு கொலையாளி கோர்ட் விசாரணையின் பொழுது, "நான் செய்ததைக் கொலை என்று கண்டிப்பவர்கள் முதலில் காஷ்மீர் பார்டரில் தீவிரவாதிகளைச் சுடும் ராணுவ வீரர்கள் செய்வதை மட்டும் எப்படி ஒப்புக் கொள்கிறீர்கள்? அவர்கள் செய்தால் சேவை, நான் செய்தால் குற்றமா?" என்று கேட்பது போல உள்ளது.

தஞ்சை பெரிய கோயில் சிற்பங்கள் ஒருவனுக்கு ஆபாசமாகத் தெரியுமெனில் அவனை என்னவென்று சொல்வது? இத்தகைய ஆளுக்காகவேதான் தியாகராஜர், 'இராமன் என்ற சொல்லுக்கு பரப் பிரம்மம் என்று பொருள், ஆனால் சிலருக்கு இராம என்ற சொல்லைக் கேட்டால் 'பெண்' என்ற அர்த்தம்தான் தோன்றும். அவன் காமாந்தகனாக இருப்பின் இப்படிப்பட்ட குதர்க்க எண்ணங்களுள் சிக்கி கடைத்தேறாமல் அவதிப் படுவான்' என்கிறார். கற்களைக் கலை நுணுக்கத்துடன் காண்பது போல என் படத்தில் வரும் கதாநாயகியையும் காணலாமே என்ற ஒரு வாதத்தை சூர்யா எழுப்பலாம். அசைவில்லா ஒரு கல்லைக் காணும் பொழுது எழும் உண்ர்வும், மனித உடலில், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய பாகங்களின் அசைவை 70 எம்.எம் ஸ்க்ரீனில் படம் பிடித்துக் காட்டும்பொழுது எழும் உணர்வும் ஒன்றா? கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் திருமணமாகி முதலிரவு நிகழ்கிறது என்று கட்டியம் கூறிவிட்டு, 'கதாநாயகியைக் கோயில் சிற்பத்தைப் பார்ப்பது போல கலைக் கண்ணுடன் காணுங்கள், இல்லையெனில் கோயிலில் மேலாடை இல்லா சிற்பங்களையெல்லாம் நீக்குங்கள்' என்ற வாதம் நகைப்புக்குரியது.

மனிதனை மரணமும் செக்ஸும் குழப்புமளவிற்கு வேறொன்றும் குழப்புவதில்லை. செக்ஸைப் பற்றிய விழிப்புணர்வு பள்ளிப் பருவத்திலிருக்கும் மாணவனுக்கு மிக அத்தியாவசியம் என்று பல டாக்டர்களும் மனோதத்துவ நிபுணர்களும் இன்று கூறுகிறார்கள். 'Awareness' பரவிக் கிடக்கும் இந்தக் காலத்திலேயே ஒரு மனிதனை இந்த விஷயங்கள் குழப்பத்துள் ஆழ்த்துமெனின், 1000 வருடங்களுக்கு முன் இருந்த மனிதன் எப்படிக் குழம்பியிருப்பான்? இப்படிப்பட்ட குழப்பங்கள் நீங்க, educative perspective-இல் கோபுரங்களில் இலைமறை காய்மறையாய் பாலியல் சம்பந்தமான சிற்பங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. இப்படியிருக்கையில், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல, கோயில் சிற்பங்களையும் 'நியூ' படத்தில் பரவியிருக்கும் ஆபாசத்தையும் எஸ்.ஜே.சூர்யா ஒப்பிட்டு இருப்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

அவர் சொல்லும் வாதத்தை, ஒரு பேச்சிற்காக ஒப்புக் கொண்டு, பாலியல் காட்சிகளைச் சித்தரிக்கும் சிற்பங்களை எல்லாம் களைய, தஞ்சை பெரிய கோயிலுக்குப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். பல நாட்கள் தேடினாலும் ஏமாற்றமே மிஞ்சும். எத்தனையோ அற்புத சிற்பங்கள் நிறைந்த அக்கோயிலில், சூர்யா சொல்லியிருப்பதைப் போல, பாலியல் காட்சியைச் சித்தரிக்கும் ஒரு சோழர் காலச் சிற்பம் கூடக் கிடையாது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விதண்டாவாதம் பேசும் சூர்யா, தான் கொடுக்கும் தகவல்களில் கொஞ்சமேனும் உண்மையிருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொண்டு பேசியிருந்தால் கூட, அவர் உளறலுக்குச் சற்றே செவி சாய்க்கலாம். தான் சொல்வதில் சத்தியம் இருக்கிறதா என்று தெரியாத மனிதன், "நான் எடுக்கும் படங்களை நம்பி எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. சமூகப் ப்ரக்ஞை உடையவன் நான்" என்று அவனே மார்தட்டிக் கொள்வதில் மட்டும் என்ன நேர்மை இருக்கும்? கள்ளக் கடத்தலில் ஈடுபடுபவனை நம்பிக் கூடத்தான் பல குடும்பங்கள் இருக்கும். கள்ளக் கடத்தல் நியாயம் என்று வைத்துக் கொள்வோமாயின் 'நியூ' படத்தைக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க வேண்டிய உன்னத காவியம் என்று வைத்துக் கொள்ளலாம்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு நாங்கள் கூற விரும்புவது ஒன்றுதான். உரக்கப் பேசப்படுவதெல்லாம் உண்மையாகிவிடாது. தனது படத்தில் ஆபாசமில்லை என்று சத்தமாய் பேசுவதைவிட, அடுத்த படத்தில் ஆபாசமில்லாமல் எடுத்துவிட்டு சத்தியமாய் பேசுவது நல்லது. 'நான் செய்ததுதான் சரி, சென்சார் போர்டும் மாதர் சங்கங்களும் முட்டாள் மந்தைகள்' என்றுச் சொல்லித் திரிந்தாரெனில், காலப்போக்கில் அவர் பேச்சின் மேலுள்ள நம்பகத்தன்மை இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.