http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 3

இதழ் 3
[ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தலையங்கம்
மத்தவிலாச அங்கதம் - 1
வாசி வாசியென்று வாசித்த தமிழின்று ...
கதை 2 - காரி நங்கை
வாருணிக்குக் கலைக்கோவன்
என்றைக்கு விழிப்பது?
கட்டடக்கலை ஆய்வு - 3
கல்வெட்டாய்வு - 2
வல்லமை தாராயோ?
கருங்கல்லில் ஒரு காவியம் - 3
சங்கச்சாரல் - 3
கோச்செங்கணான் யார் - 1
இதழ் எண். 3 > கதைநேரம்
மத்தவிலாசம் : நாடகத்தைப்பற்றி...

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் இயற்றப்பட்ட மத்தவிலாசம், பகவதஜ்ஜுகம் என்ற இரண்டு அங்கத நாடகங்களும் இந்திய இலக்கிய வரலாற்றில் ஓர் உன்னதமான காலகட்டத்தின் சான்றுகளாகும். இந்திய அங்கத இலக்கியத்திற்கு மிகப்பழமையான எடுத்துக்காட்டுகளாகும் இவை. இவையிரண்டும் மகேந்திரன் காலத்திலேயே முன்னோடிகளாக எண்ணப்பட்டன. இந்த நாடகங்களின் முன்னுரைகளே இந்த உண்மையினை எடுத்துக்காட்டுகின்றன. பகவதஜ்ஜுகத்தின் முன்னுரையில் அரங்கப் பொறுப்பாளி சூத்திரதாரி தனது நண்பனிடம் நகைச்சுவை சிறந்து தோன்றுகிற அங்கத நாடகம் போடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள, நண்பன் விதூஷகன் அந்தவிதமான நாடகத்தைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்கிறான். மத்தவில்¡ச அங்கதத்தில் போதைக் களிப்பு நிறைந்த அங்கத நாடகம் போடப்போவதாக சூத்திரதாரி சொல்லும்போது, அவனது மனைவி நடீ, அந்தவிதமான நாடகம் புது முயற்சி என்கிறாள். குகைக்கோயிலமைப்பு மற்றும் இசை இவைகளுக்கு மட்டுமின்றி நாடகக் கலைக்கும் மகேந்திரன் முன்னோடி என்பதை இந்தக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இசை நயம் இந்த நாடகங்களின் மற்றுமொரு சிறப்பு அம்சமாகும். எடுத்துக்காட்டாக, மத்தவிலாச நாடகத்தின் வசனத்துள் இருபத்துமூன்று பாடல்கள் இணைந்துள்ளன. இந்த இசை நய அங்கதங்கள் சேக்ஷ்பியர் காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகள் முந்தியவையாகும்.

பல்லவ அரசின் தலைநகரான காஞ்சிபுரம் மத்தவிலாச நாடகத்தின் பின்னணியாக அமைந்துள்ளது. சத்தியசோமன் என்னும் கபாலதபசி, அவனுடைய துணைவி தேவசோமா இவர்களின் குடிக்களியாட்டை மையமாகக் கொண்டு நாடகம் இயங்குகிறது. கபாலிகள் என்பவர்கள் புரட்சிக்கார சைவர்கள். மதுவுண்ணல், மயங்கியாடல், கூடவே துணைவியரோடு யோகபோகம் செய்தல் இவர்களுடைய வேள்விகள் ஆகும். மயானக்காடுதான் கபாலிகளின் உறைவிடம். பாத்திரம் போன்ற கபாலவோட்டின் மேல்பாகத்தைத் தானவோடாகப் பயன்படுத்துவர். இதன் காரணமாகத்தான் இவர்கள் கபாலிகள் எனப்பட்டார்கள். பிரமனின் சிரம் அறுத்து வேள்விசெய்த ச்¢வபெருமான் பற்றிய புராண நிகழ்ச்சியைக் குறிப்பாக உணர்த்துவது இது.

சத்தியசோமனாகிய கபாலியின் தானக் கபாலம் காணாமல் போகிறது. அதைத் தேடிக் கண்ட்கொள்ளுவதே நாடகத்தின் கருப்பொருள். குடித்துவ்¢ட்டு நுழைகிறார்கள் கபாலியும் தேவசோமாவும். மதுவுண்ணலாகிய பெருஞ்சபதத்தில் நிலைத்து நிற்பதால் அவள் தன்னில் பெற்றிருக்கிற பெரிய மாற்றத்தை கபாலி பாராட்டுகிறான். பேச்சின் போக்கிலேயே கபாலி போதை மயக்கத்தில் அவளது பெயரை சோமதேவா என்று மாற்றிச் சொல்லிவிடுகிறான். அவன் வேறு பெண்ணை நாடுகிறான் என்று பொறாமை கொள்ளுகிறாள் தேவசோமா. அதைப் போதை மயக்கத்தால் வந்த நாவழு என்று கூறி மன்னிப்பும் கேட்கிறான் சத்தியசோமன். இனி குடிப்பதில்லை என்று சபதமும் செய்கிறான். தனது காரணமாக சபதத்தை முறித்து அழிந்துபோகவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுகிறாள் தேவசோமா. இருவரும் வேறு மதுக்கடைக்குப் போகிறார்கள். அங்கே தானமாக மதுவைப் பெறப்போகும்போது தனது தானவோடு காணாமல்போனதை அறிகிறான் சத்தியசோமன். நிலைமையைக் கருதி தேவசோமா மாட்டுக் கொம்பில் மதுவை வாங்குகிறாள். சத்தியசோமா கபாலவோட்டுக்காக ஏங்கித் தவிக்கிறான். பழைய இடத்துக்கே வந்து தேடுகிறார்கள். அங்கும் கபாலவோட்டைக் காணவில்லை. தானக் கபாலத்தில் சிறிது பொரித்த கறி இருந்ததால் அதை ஒரு நாய் அல்லது புத்த துறவிதான் எடுத்திருக்கவேண்டும் என்று சத்தியசோமன் நிர்ணயம் செய்கிறான். இந்தவேளை ஒரு புத்த துறவி வருகிறார். கபாலி ஜோடி, தானவோட்டைத் திருடிக்கொண்டது அவர்தான் என்று முடிவு கட்டுகிறது. சண்டை மூளுகிறது. இப்பொழுது சத்தியசோமனுக்கு அறிமுகமான பாசுபதன் என்று பெயர் கொண்ட துறவி வந்து மத்தியஸ்தராகிறார். முடிவற்ற தர்க்கத்தின் இறுதியிலே புத்த துறவி சோர்வடைந்து தனது கபாலவோட்டை ஒப்படைக்கவே தயாராகிறான். உண்மையான கபாலவோட்டை ஒரு நாயிடமிருந்து பறிக்கிறான். ஒரு பைத்தியக்காரன் கடைசியில் வருகிறான். கபாலவோடு உரியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு முடிவில் மகிழ்ச்சியுடன் எல்லோரும் நண்பர்களாகப் பிரிந்து செல்கிறார்கள்.

இந்த கபாலி மற்றும் பாசுபத பிரிவினர் மகேந்திரன் காலத்தில் சீர்குலைந்த நிலையில் இருந்திருக்கவேண்டும். இதனை நாடகத்தில் மன்னர் எள்ளிநகையாடுகிறார். இவர்கள் இந்த நிலையில் இருந்தாலும் இந்தியாவில் கபாலிகள் பின்பற்றும் தாந்திரீக தத்துவம் ஒரு முக்கிய தத்துவமாக இருந்தது. புராதன சைவர்கள் ஏற்றுக்கொள்ளாத ஐந்து செய்திகள் தாந்திரீகத்தின்படி முக்தி வழிகளாகும். அவை பஞ்ச மகரங்கள் எனப்படும். 1. மத்த்¢யம் (மது), 2. மாமிசம் (புலால்), 3. மத்சியம் (மீன்), 4. மதுரம், 5. மைதுனம் (யோகபோகம்) என்பன அவை. நாடகத்தில் ஆசிரியர் இவற்றையெல்லாம் குற்¢ப்பாக எடுத்தாளுகிறார்.

மத்தவிலாசம் ஏழாம் நூற்றாண்டின் காஞ்சிபுரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஏகாம்பரநாதர் கோயில் நேரடியாகவே குறிக்கப்படுகிறது. கோவிலின் மத்தள ஓசை, பூக்கடைகள், எழிலுடைய இளமங்கையர் - இவை போன்ற குறிப்புகளும் காணப்படுகின்றன. மகேந்திரவர்மனின் பல பட்டப்பெயர்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. சூத்திரதாரி என்பவனால் நாடகம் தொடங்கிவைக்கப்படுகிறது. முன்னுரைக்குப்பின் நாடகம் இயல்பாக இணைக்கப்படுகிறது. சூத்திரதாரி ஆசிரியருடைய புகழைப் பாடியே பழகிவிட்டது என்று சொல்லுகிற உரையாடலின் தொடர்ச்சியாக, நாடகப்பாத்திரமான கபாலி சொல்லுகிற மதுவருந்தியே பழகிவிட்டது என்ற உரையாடல் அமைகிறது. மகேந்திரவர்மனின் மற்றொரு நாடகமான பகவதஜ்ஜுகத்திலும் இதுபோன்ற உத்தி பயன்படுத்தப்படுகிறது. காளிதாசரின் சாகுந்தல நாடகத்தின் அமைப்பும் இதுபோன்றதொரு உத்திக்கு எடுத்துக்காட்டாகும்.

எம்.சி.லாக்வுட்



நாடகப்பாத்திரங்கள்

சூத்திரதாரி : அரங்க மேர்பார்வையாளர் (அரங்கத்தின் பொறுப்பாளி)

நடிகை : (நடீ) சூத்திரதாரியின் மூத்த மனைவி. நாடகத்தின் அமைப்புக்கு உதவுபவள்.

கபாலி : பிச்சைப்பாத்திரமாக ஒரு கபாலவோட்டை ஏந்திய புரட்சிக்கார சைவத்துறவி. சத்தியசோமா என்று இயற்பெயர் கொண்டவன்

தேவசோமா : சத்தியசோமாவின் காதலி

சாக்கியபிக்கு : நாகசேனன் என்ற இயற்பெயர் கொண்ட புத்ததுறவி

பாசுபதன் : பாப்ருகல்பன் என்ற இயற்பெயர் கொண்ட புரட்சி சைவத்தின் மற்றொரு பிரிவினன்

உன்மத்தன் : ஒரு பைத்தியக்காரன்



மத்தவிலாசம்

(கடவுள் வாழ்த்துக்குப்பின் சூத்திரதாரி நுழைகிறான்)

<சூத்திரதாரி> :

ஏகன் அனைத்தும் ஆன்ற அதிபன்
அந்த ஒளிதிகழ் கபாலி
உன் செயல் எதிலும்
ஓங்கிசை தருக
வேர்ப்புலனால் ஆகிவரும் எழுச்சிகளை
இயற்கையதன் வெளிப்பாட்டை
ஊனுடலின் இயக்கங்களை
உடை உரையைத் திரளாக்கும்
மூவுலகப் பரிணாமப் பவனியினில்
தனித்தவனே நிகழ்த்துகின்ற கூத்தினிலே
காட்சி அவனே: காண்போன் அவனே!

ஆ.. இரண்டாம் மனைவியின் காரணமாக கோபங்கொண்டிருக்கும் எனது மூத்த மனனவியை மகிழ்விக்க ஒரு நல்ல வழி இருக்கிறது. வெகு காலத்திற்குப் பிரகு ஒரு நாடகத்தை நடத்த அரசவை நம்மைக் கேட்டிருக்கிறது. அவளையே கேட்போம்.

(மேடைக்குப் பின்னால் சற்று உற்றுப் பார்த்து)

அம்மா, கொஞ்சம் இங்கே வா.

(நடிகையாகிய முதல் மனைவி நுழைகிறாள்)

<நடீ> : (கோபமுடன்) என்ன ஐயா இது? இந்த வயோதிக காலத்திலேபோய் இளமைப் பாத்திரங்களைக் கொண்ட போதைக் களிப்பு பற்றிய கேலி நாடகத்தை நடத்த வந்திருக்கிற்£ரே?

<சூத்திரதாரி> : அது அப்படித்தான்.

<நடீ> : அப்படியானால் நீர் ரசிக்கிற ஒருத்தியை வைத்தே அதை நடத்தும்.

<சூத்திரதாரி> : உன்னிடமே நடத்துகிறேன்.

<நடீ> : அப்படி அவள் சொல்லிக் கொடுத்திருக்கிறாளா?

<சூத்திரதாரி> : அது கிடக்கட்டும். எது எப்படி ஆனாலும் அங்கே போனால் மிகுதியும் மரியாதை கிடைக்க இருக்கிறது.

<நடீ> : அது உமக்குத்தான் சரி.

<சூத்திரதாரி> : இருக்கலாம் அன்பே. ஆனால் உன்னுடைய நடிப்பில் மகிழ்ந்து சபையே ஆரவாரிக்கும்.

<நடீ> : (மகிழ்ந்து) அப்படியானால் நமக்கு நமது மதிப்பிற்குரிய பிரபுக்களின் ஒப்புதல் கிடைத்துவிட்டதா?

<சூத்திரதாரி> : மெய்தான்.

<நடீ> : அப்படியானால் இந்த மகிழ்ச்சியான செய்திக்காக நான் உமக்கு என்ன பரிசு தரவேண்டும்?

<சூத்திரதாரி> : இந்த மகிழ்ச்சிச் செய்திக்கென்று இன்னும் வேறு பரிசு எனக்கு வேண்டியதில்ல¨. ஏனென்றால்:

குலவிக் கொண்டுன் கன்னந் தழுவிய
குழையொடு புருவம் கூரொளி முறுவல்,
முன்னங் காணரு முகமத் வென்றனம்
பின்னரும் வேண்டுதற் கென்றிங் கென்னுண்டு?

<நடீ> : இப்போது எதனை அரங்கேற்றப் போகிறீர்கள்?

<சூத்திரதாரி> : நீயே சொன்னாயே 'போதைக் களிப்புக் களிப்புக் கேலி நாடகம்'.

<நடீ> : (தனக்குள்) நான் சொல்லுவதெல்லாம் அவருடைய எண்ணத்துக்குப் பொருத்தமாக உள்ளதால், நமது கோபமுங்கூட அவருக்குச் சாதகமாகவே இருக்கிறது. (சப்தமாக) இந்தப் படைப்பினால் வெற்றியை உரிமையாக்கப் போகிற அந்தக் கவிஞன் யார்?

<சூத்திரதாரி> : கேள் அன்பே. அவர்தான் திரு. மகேந்திரவிக்கிரவர்மர் என்ற பெயர்கொண்ட ராஜாதிராஜா. ஆறம்சப் பகை நசுக்கத் தீர்மானித்துப் பிறர் நலனுக்காகத் தன்னைத் தாழ்த்தி மூல சத்துவங்களைப் போலவே நிர்மலமானவர். கொடையிலும் செல்வத்திலும் குபேரனையும் நாணச்செய்தவர். வீரத்திலும் வளத்திலும் இந்திரனுக்குச் சமமானவர். தனது நேர்மைத் திறமையினால் சுற்றியுள்ள குறுநிலப் பகுதிகளையெல்லாம் கட்டுப்படுத்தி ஆட்சி புரிந்தவர். பல்லவ வம்சத்தின் பெருமலை திரு. ச்¢ம்மவிஷ்ணுவர்மரின் மகன். அவரே இந்த நாடகத்தின் ஆசிரியர்.

நிற்க:

ஞானமுதாரம் பாசம் மேன்மை
துணிவுடன் செம்மை கலைதனில் திறமை
வாய்மை வீரம் நேர்மை நிதானம்
முனிவரும் இவ்வருங் குணவதிசயங்கள்
கற்பக முடிவினில் பொருட்கள் யாவும்
அகால மாந்தனில் கலத்தலைப் போலும்
இவர்தம் ஒருவரில் தானே சரணம்.

இன்னும்:

தகவுடை மக்கள் தரமுடை மொழியும்
எளிமையுள்ள பொருளற்ற வாக்கும்
தகுதியுறுவது இவரால்; இவரே
வெகுவவம் கவினுறு கவிதையின் சுரங்கம்.

<நடீ> : இப்பொழுது ஏன் தாமதம் செய்கிறீர்கள்? அபூர்வமான இந்த நாடகத்தை உடனே நடத்தவேண்டும்.

<சூத்திரதாரி> : மன்னித்துக்கொள்.

பாட்டாம் பெருந்தனந்தான் எனக்கு
பாட்டில் நம் புலவரை இணைத்து
பாங்காய புண்ணியங்கள் தொடுத்து
பாடும் பழக்கம் எனது வழக்கம் ...

<கபாலி> : (அரங்கத்தின் பின் இருந்து) அன்பே, தேவசோமா!

<சூத்திரதாரி> :

சிரவோடுடையான் இளநங்கையன்பன்
அளவற கபாலி மது கொளல் போல.

(அவர்கள் செல்கிறார்கள்)

-- முன்னுரை முடிந்தது --

(அப்பொழுது கபாலி தனது நங்கையுடன் வருகிறான்)

(தொடரும்)





'Mattavilasa Angatham' ('Mattavilasa Prahasanam') A Translation into Tamil by E. John Asirvatham Of King Mahendravarman's Sanskrit Farce Published by The Christian Literature Society (copyright 1981 by Michael Lockwood), which, in turn, was Based on the Edition and Translation in English Of Mahendravarman's original Sanskrit Text By Michael Lockwood and A. Vishnu Bhat Published by The CLS (copyright 1981 by Michael Lockwood)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.