http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 35

இதழ் 35
[ மே 15 - ஜூன் 14, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆய்வேடுகளின் அருமை
போசளீசுவரம் கோயிலில் புதிய கல்வெட்டு
பைசாசம் - வாசகர் எண்ணங்கள்
பைசாசம் - ஒரு விமர்சனம்
பழுவூர் - 14
உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 7
கோயில்களும் கலைகளும்
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 1
தமிழின் பெருமையைக் குறைசொன்னாரா மதன்?
Links of the Month
சங்ககாலத்து உணவும் உடையும் - 1
இதழ் எண். 35 > சுடச்சுட
போசளீசுவரம் கோயிலில் புதிய கல்வெட்டு
மு. நளினி

இந்த இதழ் முதல், புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தகவல்களை மற்ற ஊடகங்களில் அவை வெளிப்படுத்தப்படும் முன்னரே சுடச்சுட வரலாறு.காம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்.

திருச்சிராப்பள்ளி சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரத்தை அடுத்து அமைந்துள்ளது போசளீசுவரம் திருக்கோயில். ஒய்சளர் காலக் கோயிலான இதில், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் மு. நளினியின் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் இதுவரையிலும் படியெடுக்கப்படாத புதிய கல்வெட்டொன்றைக் கண்டறிந்து படித்துள்ளனர். அழுத்தமான வண்ணப்பூச்சின் கீழ் மறைந்திருந்த இக்கல்வெட்டு, எழுத்தமைதியின் அடிப்படையில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம் என்று டாக்டர் மா.இராச மாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகட்கு முன்னால் கண்ணனூர் என்றழைக்கப்பட்ட இப்பகுதியை இங்குள்ள கல்வெட்டுகள் விக்கிரமபுரம் என்றும் அழைக்கின்றன. கருநாடகத்தைச் சேர்ந்த துவாரசமுத்திரத்தில் இருந்தபடி ஆட்சிசெலுத்திய ஒய்சளர்கள், சோழப் பெருவேந்தன் மூன்றாம் இராஜராஜனின் வேண்டுகோளுக்கிணங்க, பாண்டியர் படையெடுப்பிலிருந்து அம்மன்னனைக் காப்பாற்றுவதற்காகச் சிராப்பள்ளி வந்தனர். மூன்றாம் இராஜராஜனுக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்த ஒய்சள வேந்தர் வீரநரசிம்மரின் ஆளுகையில் சிராப்பள்ளியும் அதன் சுற்றுப்புறங்களும் பல காலம் இருந்தன. சமயபுரத்துக்கு அருகில் கண்ணனூரை உருவாக்கி, அதையே தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆட்சிசெய்த ஒய்சள வேந்தர்களில் குறிப்பிடத்தக்கவர் வீரசோமேசுவரர்.

வீரநரசிம்மரின் மகனான இவ்வேந்தர், சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் துணையாக விளங்கித் தமிழ்நாட்டின் மையப் பகுதியைத் தம் ஆட்சியின் கீழ் நிலைப்படுத்தியிருந்தார்.சைவச் செல்வராக விளங்கிய இவர் ஆட்சிக் காலத்தில், பல திருக்கோயில்கள் இப்பகுதியில் எழுப்பப் பெற்றன. திருவானைக்கா கோயிலில் உள்ள இவரது கல்வெட்டொன்று இவர் எடுப்பித்த அக்கோயில்களின் பெயர்களையும் அவற்றிற்களித்த கொடைகளையும் விரிவாகப் பேசுகிறது.

சமயபுரத்திற்கு அருகில் உள்ள போசளீசுவரர் கோயிலை வீரசோமேசுவரர் தம் தாய் காளல தேவியின் நலத்திற்காக எடுப்பித்ததாகக் கூறும் கல்வெட்டு, இக்கோயிலின் வழிபாட்டிற்கும் செலவினங்களுக்குமாகப் பல ஊர்களிலிருந்த விளைநிலத் துண்டுகளை மன்னர் இக்கோயிலுக்கு வழங்கியதாகச் சொல்கிறது. பிற்சோழர் கலைமுறையைப் பின்பற்றி ஒய்சளர்கள் எழுப்பியுள்ள இக்கோயிலின் விமானம் தனித்தன்மையது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, போசளீசுவரம் கோயிலின் முகமண்டபம், பெருமண்டபம், கோபுரம், திருமதில் ஆகியவற்றைக் கட்டியவராக, விக்கிரமசோழ வள நாட்டைச் சேர்ந்த மண்ணைக் கொண்ட சோழவளநாட்டின் மதுராந்தகபுரத்தில் வாழ்ந்திருந்த திருமங்கலம் உடையாரைச் சுட்டுகிறது. இக்கல்வெட்டின் கண்டுபிடிப்பினால் கோயிலின் விமானத்தை வீரசோமேசுவரனும் வளாகத்தின் பிற பகுதிகளை திருமங்கலம் உடையாரும் கட்டியுள்ளமை அறியப்படுகிறது.

ஒய்சளர் வீழ்ச்சிக்குக் காரணமான முகமதியப் படையெடுப்பால் பள்ளிவாசலாக மாற்றப்பட்டிருந்த இக்கோயிலை, விஜய நகர அரசர் கம்பணர் மீட்டெடுத்து மீண்டும் சைவக் கோயிலாக மாற்றினார்.

நேர்த்தியான கலை அமைப்புடைய இந்தக் கோயில் தமிழ்நாட்டில் ஒய்சளர்களால் எழுப்பப்பட்டு எஞ்சியிருக்கும் மிகச் சில கோயில்களுள் ஒன்றாகும். இதை முறையான பராமரிப்பின் கீழ்க் கொணர்வது இன்றியமையாதது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.