http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 110

இதழ் 110
[ ஆகஸ்ட் 2014 ] பத்தாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

பத்தாம் ஆண்டு நிறைவு
கதை 13 - எருக்காட்டூர் பெருந்தச்சன்
தோழி
Kudumiyanmalai - 4
இராஜேந்திரசோழன் போற்றிய எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில்
திருக்கற்குடி விழுமியதேவர் கோயில்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 02
சிக்கல் மாடக்கோயில்
தேடலில் தெறித்தவை - 15
ஆத்தி சூடிய சோழ வீரமே!
இதழ் எண். 110 > இலக்கியச் சுவை
ஆத்தி சூடிய சோழ வீரமே!
ரிஷியா
ஆன்று அம்மரவு ஒரு வீரயுக சமுதாயத்தின் முகவரியாக விளங்கியது அதன் பிறப்பிடம் பொன்னி நதிமகள் அழகு நடைபயிலும் எழில் வளர் சோழ வளநாடு. சோழ மறவர்கள் வீரத்திற்கும், வெற்றிக்கும் பெயர் பெற்றவர்கள், சோழகுல மரபினாரின் “அடையாளப் பூவாக விளங்கியது “ஆத்தி” என்றும், “ஆர்” என்றும் அழைக்கப்பட்ட மஞ்சள் மலர், போர்களத்தில் ஆத்தி மாலை சூடியே சோழ மரபினர் போர் புரிந்தனர்.



பெண்பாற் புலவரான முடத்தாமக் கண்ணியார் தான் பாடிய பொருள் ஆற்றுப்படையில் மா மன்னனான கரிகால் சோழனை பாடும் பொழுது,

“கண் ஆர் கண்ணி கரிகால் வளவன்”
- பொ.ஆ.படை 148 என சிறப்பித்து பாடுகிறார்.

இதன் பொருள் அழகான ஆத்தி மாலையினை தலைமாலையாகச் சூடியவனான கரிகால் வளவன் என்பதாகும்.

போர்கள வெற்றிச் சிறப்புகளை சு{டும் காவிரியின் காவலர்களான சோழர்கள் தம் தலைமாலையாக ஆத்திமலரால் ஆன மாலையை அடையாள பூமாலையாக சூடுவர் என்பதை அகநாநு]று பாடலும் படம் பிடிக்கிறது. பாடல் இதோ,

“ஆர் அம்கண்ணி அடுபோர்ச் சோழர்”
- அகம் 93-4

இதன் பொருள் ஆத்தி பூவால் ஆகிய தலைமாலையை அணிந்து போர் வெல்லும் சோழர்கள் என்பதாம்.

சோழர்கள் போர்வைக் கோப் பெருநற்கிள்ளியைக் சாத்தந்தையார் என்றும் சங்க கவி இவ்வாறு பாடுகிறார்.

“ஆர்பு எழுகடலிலும் பெரிது அவள் களிறே
கார்பெயல் உருமின் முழங்கல் ஆனவே
யார்கொல் அளியர் தாமே ஆர்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மன்னன் கைப்பட்டோரே”

- புறநானு]று - 81.

இதன் விளக்கமானது, கடல் ஆரவாரத்திலும் அவன் படையாராவாரம் பெரிது. கார்கால இடியினும் அவனுடைய களிறு பெரிய முழக்கஞ் செய்வது. ஆத்தி மாலையும், வழங்குதற்குக் குவிந்த கையும் உடையவன் அவனே.

ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையானது தலைமாலையாகவும், தாராகவும் - தோள் மாலையாகவும் அணியப்பட்டது. இவ்வாறு சோழர்களின் வீரமாலையாக, அடையாள பூவாக உள்ள ஆத்தி இன்று அரிதாக சில கோவில்கள் தாவிருட்சமாக உள்ளது, பெரும் வழக்கில் பயன்பாட்டில் இல்லை.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.