http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 174

இதழ் 174
[ ஜனவரி 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

திருமடத்துக் குடைவரைகள்
Gajendra Moksham - A Miniature panel from Thiruvalanchuzhi
The dance of Shiva in Thiruvalangadu and karana Vishnukrantam
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 2
எலவானசூர்க்கோட்டை மாடக்கோயில் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 58 (மறந்ததைக் காற்றும் மறைக்காதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 57 (நிலவென மறைந்தது நீயா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 56 (ஒருமுறை வந்து பாராயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 55 (நெஞ்சம் மறப்பதில்லை)
இதழ் எண். 174 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 56 (ஒருமுறை வந்து பாராயோ?)
ச. கமலக்கண்ணன்


மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
あらざらむ
この世のほかの
思ひ出に
今ひとたびの
逢ふこともがな

கனா எழுத்துருக்களில்
あらざらむ
このよのほかの
おもひでに
いまひとたびの
あふこともがな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் இசூமி ஷிக்கிபு

காலம்: கி.பி. 976-1027க்குப் பிறகு.

பேரழகியான இவர் சிறந்த புலவராகவும் சமகாலத்தில் அறியப்பட்டவர். இவரது பேரழகே இவரது வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. தனது 20ம் வயதில் இசூமி மாகாணத்தின் ஆளுநராக இருந்த மிச்சிசதாவை மணந்தார். இதனாலேயே இப்பெயரும் பெற்றார். கி.பி 997ல் கொஷிக்கிபு என்ற மகள் பிறந்தார். பிற்காலத்தில் இத்தொடரின் 60வது பாடலை இயற்றினார். மிச்சிசதாவை மணக்கும் முன்னரே அரசவையில் பணிபுரிந்த ஓமொதொமரு என்பவருடன் வாழ்ந்து வந்தார். சில வரலாற்றுக் குறிப்புகள் மனைவி என்று குறிப்பிடுகின்றன.

மிச்சிசதாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே பேரரசர் ரெய்செய்யின் மகன் இளவரசர் தமேதகாவுடன் காதல் ஏற்படுகிறது. இதை அறிந்த மிச்சிசதா திருமண உறவை முறித்துக் கொள்கிறார். சில ஆண்டுகளிலேயே மிச்சிசதா இறந்துவிடுகிறார். இவரது பெற்றோரும் மகளும் இவரை வீட்டைவிட்டுத் துரத்தி விடுகின்றனர். பின்னர் ஓரிரு ஆண்டுகளிலேயே தமேதகாவும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார்.

பிறகு தமேதகாவின் தம்பி அட்சுமிச்சியுடன் காதல் ஏற்படுகிறது. அப்போதுதான் "இசூமி ஷிக்கிபுவின் நாட்குறிப்பு" என்ற அந்தப் புகழ்பெற்ற நாட்குறிப்பை எழுதுகிறார். கி.பி 1003-1004ல் 9 மாதங்கள் இருவருக்குமிடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காதல் கவிதைகள் மற்றும் நிகழ்வுகள் இந்நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளில் 'ரெங்கா' எனப்படும் தொடர்பாடல்களும் அடங்கும். பின்னர் திருமணம் செய்துகொண்டு அட்சுமிச்சியின் அரண்மனையில் குடியேறுகிறார். ஆனால் அட்சுமிச்சியும் சில ஆண்டுகளிலேயே கி.பி 1007ல் இறந்துவிடுகிறார்.

கி.பி. 1009ம் ஆண்டு பேரரசர் இச்சிஜோவின் அந்தப்புரத்தில் பணிக்குச் சேர்கிறார். அப்போது அரண்மனையில் இராணுவத் தளபதியாக இருந்த யசுமாசா என்பவருடன் காதல் ஏற்படுகிறது. திருமணம் செய்துகொண்டு இருவரும் தாங்கோ மாகாணத்துக்கு இடம்பெயர்கின்றனர். கி.பி 1025ல் இவரது மகள் கொஷிக்கிபு இறந்துவிடுகிறார். பின்னர் இவர் புத்தமதத்தைத் தழுவிக்கொள்கிறார். கி.பி. 1027ல் தனது கடைசிப் பாடலைப் புனைகிறார். அப்போது இறந்த பேரரசி யொஷிகோவின் நினைவாகப் புத்தருக்கு நகைகளைக் காணிக்கையளிப்பதாக அமைந்திருக்கிறது. அதன் பின்னர் எப்போது இறந்தார் என்பது தெரியவில்லை.

ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 242 பாடல்களும் இரண்டு தனிப்பாடல் திரட்டுகளும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத புலவர்களின் பட்டியலில் பலவகைகள் உள்ளன. காலத்தால் முற்பட்ட பட்டியல், இடைக்காலப் பட்டியல், பிற்காலப் பட்டியல், பெண்பாற்புலவர்கள் பட்டியல் ஆகியவற்றில் இவர் இடைக்காலப் பட்டியலிலும் பெண்பாற்புலவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றவர் ஜப்பானிய வரலாற்றில் இவர் ஒருவரே.

பாடுபொருள்: இறக்கும்முன் ஒருமுறையாவது விரும்பியவரைக் காண முயல்வது

பாடலின் பொருள்: என் வாழ்வு விரைவில் முடியப் போகிறது. வேறொரு உலகுக்கு உன் நினைவைக் கொண்டுசெல்ல விழைகிறேன். கடைசியாக ஒருமுறை வந்து என்னைக் காணமாட்டாயா? இப்போதே என்னைக் காண வரமாட்டாயா?

மிகவும் நேரடியாகப் பொருள் தரக்கூடிய வார்த்தை அலங்காரமற்ற எளிமையான பாடல். இப்பாடலை இவர் தன்னிலையிலிருந்து இயற்றினார் என்று கருத இடமில்லை. இவரது கடைசிப்பாடல் புத்தரின்பால் இயற்றப்பட்டது என்ற தெளிவான வரலாற்றுக்குறிப்பு நமக்குக் கிடைக்கிறது. 9 மாதகால நாட்குறிப்பில் இடம்பெற்ற பாடல்களைப் போல இதுவும் வெளியிலிருந்து படர்க்கையாக இயற்றியதுதான்.

வெண்பா:

முடிவும் நெருங்கும் உடலும் அழியும்
வடிவும் மறவாது கொள்ள - மடியுமுன்
வாராய் ஒருகணம் இன்றே அதனினும்
இன்னே தருவாய் நினைவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.