![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 177
![]() இதழ் 177 [ மே 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் さびしさに 宿をたち出でて ながむれば いづこも同じ 秋の夕暮れ கனா எழுத்துருக்களில் さびしさに やどをたちいでて ながむれば いづこもおなじ あきのゆふぐれ ஆசிரியர் குறிப்பு: பெயர்: மதகுரு ரியோஜென் காலம்: தெரியவில்லை. யமாஷிரோ மாகாணத்தில் ஒதாகினோகொரி எனுமிடத்தில் பிறந்த இவரது தந்தையார் யாரெனத் தெரியாதபோதும் தாயார் ஃபுஜிவாரா வம்சத்தின் சனேகதா வழியில் வந்தவர் எனக் கூறுகிறார்கள். ஹியெய் மலையில் அமைந்திருந்த ஆலயத்தில் கியோன் எனும் புத்தமதப் பிரிவின் தலைவராக இருந்து பின்னர் வாழ்வின் இறுதிப்பகுதியில் ஓஹரா மலையில் இருந்த உன்ரின் கோயிலில் தனிமையில் வாழ்ந்து வந்தார். அப்போது இயற்றப்பட்டதுதான் இப்பாடல். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 31 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: தனிமையின் வெறுமை. பாடலின் பொருள்: என் குடிலுக்கு வெளியே வந்து பார்த்தால் இந்த இலையுதிர்கால அந்தி நேரத்தின் என் மனதைப் போலவே வெளியெங்கும் தனிமையாகவே காட்சி தருகிறது. தனிமையின் வெறுமையை விளக்கும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரில் பல பாடல்கள் தனிமை குறித்தனவாக இருக்கின்றன. பல பாடல்கள் துணையைப் பிரிந்த காதல்வலியையும் சில பாடல்கள் காதல் குறித்த சுட்டலின்றித் தனிமையை மட்டும் குறிக்கின்றன. இப்பாடலும் முதுமையில் வரும் தனிமையைக் குறித்தே பாடப்பட்டுள்ளது. வெண்பா: அகத்தின் துயரமும் தோன்றும் வெளியில் பகலவன் சாயும் பொழுதில் - முகவியர் இல்லா இலையுதிர் கூதிரின் காட்சியின் பிம்பமாய் ஆகும் மனது முகவியர் இல்லா - இன்முகம் காட்டுவோர் இல்லாத (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |