http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 177

இதழ் 177
[ மே 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 4
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 1
கீழ்வேளூர் மாடக்கோயில் - 3
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 70 (உள்ளும் புறத்தும் தனிமையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 69 (கரையோர மேப்பிள்கள்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 68 (விழியிலிருந்து நினைவுக்கு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 67 (அலர்கூட்டும் வசந்தகாலக் கனவு)
இதழ் எண். 177 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 70 (உள்ளும் புறத்தும் தனிமையே!)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
さびしさに
宿をたち出でて
ながむれば
いづこも同じ
秋の夕暮れ

கனா எழுத்துருக்களில்
さびしさに
やどをたちいでて
ながむれば
いづこもおなじ
あきのゆふぐれ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: மதகுரு ரியோஜென்

காலம்: தெரியவில்லை.

யமாஷிரோ மாகாணத்தில் ஒதாகினோகொரி எனுமிடத்தில் பிறந்த இவரது தந்தையார் யாரெனத் தெரியாதபோதும் தாயார் ஃபுஜிவாரா வம்சத்தின் சனேகதா வழியில் வந்தவர் எனக் கூறுகிறார்கள். ஹியெய் மலையில் அமைந்திருந்த ஆலயத்தில் கியோன் எனும் புத்தமதப் பிரிவின் தலைவராக இருந்து பின்னர் வாழ்வின் இறுதிப்பகுதியில் ஓஹரா மலையில் இருந்த உன்ரின் கோயிலில் தனிமையில் வாழ்ந்து வந்தார். அப்போது இயற்றப்பட்டதுதான் இப்பாடல். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 31 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: தனிமையின் வெறுமை.

பாடலின் பொருள்: என் குடிலுக்கு வெளியே வந்து பார்த்தால் இந்த இலையுதிர்கால அந்தி நேரத்தின் என் மனதைப் போலவே வெளியெங்கும் தனிமையாகவே காட்சி தருகிறது.

தனிமையின் வெறுமையை விளக்கும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரில் பல பாடல்கள் தனிமை குறித்தனவாக இருக்கின்றன. பல பாடல்கள் துணையைப் பிரிந்த காதல்வலியையும் சில பாடல்கள் காதல் குறித்த சுட்டலின்றித் தனிமையை மட்டும் குறிக்கின்றன. இப்பாடலும் முதுமையில் வரும் தனிமையைக் குறித்தே பாடப்பட்டுள்ளது.

வெண்பா:

அகத்தின் துயரமும் தோன்றும் வெளியில்
பகலவன் சாயும் பொழுதில் - முகவியர்
இல்லா இலையுதிர் கூதிரின் காட்சியின்
பிம்பமாய் ஆகும் மனது

முகவியர் இல்லா - இன்முகம் காட்டுவோர் இல்லாத

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.