http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 181

இதழ் 181
[ செப்டம்பர் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜர் தேவியின் தளிகளும் மகள்களும்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 3
நாங்கூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 90 (ரத்தக்கண்ணீர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 89 (ரகசியமானது காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 88 (குறுங்கூடலின் நெடுநினைவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 87 (தூவானமும் வெண்வானமும்)
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்- 3
சங்கப் பாடல்களில் பெண் தொழில் முனைவோர் - 6
கம்பர் காட்டும் நல்லடக்கம்
இதழ் எண். 181 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 87 (தூவானமும் வெண்வானமும்)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
村雨の
露もまだひぬ
まきの葉に
霧立ちのぼる
秋の夕暮れ

கனா எழுத்துருக்களில்
むらさめの
つゆもまだひぬ
まきのはに
きりたちのぼる
あきのゆふぐれ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: மதகுரு சதாநகா

காலம்: கி.பி 1139 - 1202.

இத்தொடரின் 83வது பாடலை (துயரறுத்தலே துயரமோ?) இயற்றிய தொஷினாரியின் வளர்ப்பு மகன். தொஷினாரி தனது தம்பி மகனைத் தத்தெடுத்துக்கொண்டார். இவரது சமகாலத்தில் புகழ்பெற்றிருந்த மிகோஹிதாரி பாடல் புனைவகத்தில் (புலவர்கள் சங்கமம் போன்ற அமைப்பு) ஒருவராக விளங்கினார். தனது 53ம் வயதில் துறவறம் பூண்டார். பின்னர் 64ம் வயதில் அரசவைப் புலவர் குழுவில் இடம்பெற்றார். ஷின்கொக்கின்ஷூ எனும் தொகுப்பை உருவாக்கப் பேரரசர் ட்சுச்சிமிகாதோ இவரைப் பணித்தார். ஆனால் தொகுப்பு முற்றுப்பெறும் முன்னரே இவர் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் தொகுப்பாளராக வரலாறு இவர் பெயரைப் பதிவு செய்யவில்லை. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 117 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: இலையுதிர்கால மழையின் அழகு

பாடலின் பொருள்: மழை நின்றபிறகும் ஊசியிலைகளின் நுனியில் துளிகள் இருக்கின்றன. அவை வடியும் முன்பே பனிமூட்டம் மேலெழுந்து பள்ளத்தாக்குக்கு அழகூட்டுகிறது.

பொதுவாக ஜப்பானிய இலக்கியங்களில் இலையுதிர்காலம் என்பது காதலர்களின் பிரிவுக்கு உவமையாகக் கூறப்படும். ஆனால் இப்பாடல் காதல் தொடர்பான குறிப்புகள் ஏதுமில்லை. ஜப்பானில் இலையுதிர்காலத்தில் பலவிதமான மழைகள் பெய்யும். திடீரெனப் பெய்யத் தொடங்கித் திடீரென நிற்கும் கனமழை (முராசமே அல்லது ஷிகுரே), சிறு தூறல் (ஷூரின்), நனையவைக்காத சாரல் (கொசமே) எனப் பலவிதமாகப் பெய்யும். இப்பாடலில் வருவது முராசமே எனப்படும் திடீர்மழை. புலவரின் வீட்டுக்கு வெளியே உள்ள ஊசியிலைக் காட்டில் பெய்த மழையின் துளிகள் ஊசியிலைகளின் நுனியிலிருந்து வடிவதற்குக் காத்திராமலே வெண்ணிறப் பனிமூட்டம் மேலெழுகிறது. ஈரமான சூழலில் வெண்பனி சூழ்ந்த பள்ளத்தாக்கின் அழகுக்கு இணையே இல்லை.

வெண்பா:

மழையது நிற்பினும் நீர்த்துளி இன்னும்
பிழையற நீங்கா திலையில் - பிழைத்திட
வான்முகில் சூழவே நீள்வரை எங்கினும்
வெண்பனி கூட்டும் அழகு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.