http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 180

இதழ் 180
[ ஆகஸ்ட் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
Sharda Temple- Kashmir
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 2
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 85 (உள்ளத்தில் உள்ளேனா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 81 (குயிலிசை போதுமே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர்- 5
இதழ் எண். 180 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
ச. கமலக்கண்ணன்


பாடல் 79: முகிலிடை ஒளிக்கசிவு

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
秋風に
たなびく雲の
たえ間より
もれ出づる月の
かげのさやけさ

கனா எழுத்துருக்களில்
あきかぜに
たなびくくもの
たえまより
もれいづるつきの
かげのさやけさ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் அகிசுகே

காலம்: கி.பி 1090-1155.

இப்பாடலின் ஆசிரியர் கி.பி. 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற புலவர் அகிசுவேவின் மகன். இவரும் மிகவும் புகழ்பெற்றவர். இத்தொடரின் 77வது பாடலை (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!) இயற்றிய பேரரசர் சுதொகு கி.பி. 1144ல் ஆணையிட்டதற்கு இணங்க இவர் தொகுத்ததுதான் ஷிக்காஷூ பாடல் தொகுப்பு. 7 ஆண்டுகள் முயன்று 1151ல் நிறைவு செய்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 84 பாடல்கள் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன.

ஜப்பானில் புலவர் பரம்பரை என்னும் கருத்துரு தோன்றக் காரணமானவர்கள் இவரும் இவரது தந்தையாரும். பேரரசர் ஷிராகவாவின் அரண்மனையில் வானளாவிய அதிகாரம் பெற்றிருந்தவர் இவரது தந்தையார் அகிசுவே. அதன் காரணமாகவே பேரரசர் வைத்திருந்த ஓர் ஓவியத்தொகுப்பு இவர் பார்வைக்குத் தென்படுகிறது. அதில் இத்தொடரின் 3வது பாடலை (பீலியன்ன நீள் இரவு) இயற்றிய கவிஞர் ஹிதோமரோவின் ஓவியமும் இருக்கிறது. கி.பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இணையற்ற புகழ் பெற்றிருந்தவர். அகிசுவே ஒரு சிறந்த ஓவியரும்கூட என்பதால் அத்தொகுப்பிலிருந்த கவிஞர் ஹிதோமரோவின் ஓவியத்தை வரைந்து படியெடுக்கிறார். அவர் இறக்கும் தருவாயில் அவ்வோவியத்தை அவரது மகன் அகிசுகேவுக்குப் பரிசாக அளிக்கிறார். பின்னர் அகிசுகே தனது மகனுக்கு அளிக்கிறார். இதிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஏதாவது நினைவுப்பொருட்களை வழங்கிப் புலவர் பரம்பரையை வரலாற்றில் பதியச்செய்வது தொடங்கியது.

பாடுபொருள்: முகிலுள் மறைந்து வெளிப்படும் நிலவின் அழகு

பாடலின் பொருள்: இலையுதிர்காலக் காற்று வானத்து மேகங்களை அங்குமிங்கும் அலையச் செய்யும்போது அவ்வப்போது நிலவு வெளிப்பட்டுக் கசியவிடும் ஒளி எனது இதயத்துக்குள் நேராக இறங்குகிறது.

நிலவின் அழகை வியக்கும் இன்னோர் எளிய பாடல். பாடலின் முதல் சொல் இவரது பெயரின் முதல்பாதியைக் கொண்டு தொடங்கப்பட்டிருப்பதைப் பல உரையாசிரியர்கள் வியக்கிறார்கள். கி.பி. 16ம் நூற்றாண்டில் இத்தொகுப்புக்கு உரை எழுதிய சாமுராய் வீரர் ஷிமாசு பழமையான சீனமொழிப் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி அதற்கு இணையான சிறப்புக் கொண்டதாக இப்பாடல் விளங்குகிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வெண்பா:

இலையுதிர் காலது வானளாவி ஓங்கி
மலையது மேவியே வந்து - நிலைஇல்
இதயமது சேரும் கலையும் முகில்கள்
இடையில் கசியும் நிலவு

கால் - காற்று

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.