http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 180

இதழ் 180
[ ஆகஸ்ட் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
Sharda Temple- Kashmir
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 2
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 85 (உள்ளத்தில் உள்ளேனா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 81 (குயிலிசை போதுமே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர்- 5
இதழ் எண். 180 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ச. கமலக்கண்ணன்

பாடல் 84: இன்றுபோல் நாளை இல்லை!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
ながらへば
またこのごろや
しのばれむ
憂しと見し世ぞ
今は恋しき

கனா எழுத்துருக்களில்
ながらへば
またこのごろや
しのばれむ
うしとみしよぞ
いまはこひしき

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் கியோசுகே

காலம்: கி.பி 1104-1177.

இத்தொடரின் 79வது பாடலின் (முகிலிடை ஒளிக்கசிவு) ஆசிரியர் அகிசுகேவின் இரண்டாவது மகன் இவர். சுமார் 30ம் வயது வரை தந்தையாருடன் ஒரு சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. பேரரசர் சுதொகுவின் ஆணைக்கிணங்க இவரது தந்தையார் அகிசுகே ஷிக்காஷூ தொகுப்பை உருவாக்கினார் என்று பார்த்தோமல்லவா? அதன் பின்னர் பேரரசர் நிஜோ இவரிடம் அதன் தொடர்ச்சியைத் தொகுக்க ஆணையிட்டார்.

ஜப்பானிய இடைக்கால வரலாற்றில் ஒவ்வொரு புலவரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் அங்கீகாரம்தான் இந்தத் தொகுக்கும் வாய்ப்பு. கியோசுகே மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் ஷொக்குஷிக்காஷு என்று பெயரிட்டுத் தொகுக்கத் தொடங்கினார். ஆனால் கியோசுகே தொகுத்து முடிப்பதற்குமுன் கி.பி. 1165லேயே பேரரசர் நிஜோ மரணமடைந்துவிட்டதால் தொகுப்பு நிறைவு பெற்ற பின்பும் அரசவையில் அரங்கேறாமலும் இலக்கிய வரலாற்றில் அதிகாரபூர்வமாக இடம்பிடிக்காமலும் போயிற்று. இதனால் இவர் மிகவும் மனமுடைந்தார். இருப்பினும் அதற்கு முன்பே ஓகிஷோ, வகா தோமோஷோ, ஃபுகுரோ ஜோஷி போன்ற தொகுப்புகளைத் தொகுத்திருந்தார்.

பாடுபொருள்: மலரும் நினைவுகளின் சுகம்

பாடலின் பொருள்: இன்னும் நீண்டகாலம் நான் வாழ்ந்தால் என் குழந்தைப்பருவத் துயரங்களின் வலி இப்போது மலரும் நினைவுகளாக இருப்பதுபோல் இப்போது நான் படும் துயரங்களின் வலியும் எதிர்காலத்தில் குறைந்திருக்குமோ?

வாழ்வின் துயரங்களின் வலியைக் கூறும் எளிய இப்பாடல் இவரது வாழ்வின் ஐம்பதுகளின் பிற்பகுதியில் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்றுபோல் இன்று இல்லை; இன்றுபோல் நாளை இல்லை என்ற இக்காலப் பாடலின் கருத்தை ஒட்டியிருக்கிறது. பேரரசர் நிஜோவின் மறைவால் தடைபட்டுப்போன ஷொக்குஷிக்காஷூவினால் மனமுடைந்தபோது இப்பாடலை எழுதியிருக்கலாம் என்றும் இவரது சமகாலத்திய சீனக்கவிஞர் பைஜுயி என்பவரின் ஹக்குஷூ மொன்ஜு என்ற தொகுப்பில் உள்ள பாடல் ஒன்றை அடியொற்றி இப்பாடலை இயற்றியிருக்கலாம் என்றும் உரையாசிரியர்கள் கருதுகிறார்கள்.

வெண்பா:

வலிதனை எண்ணிட எண்ணிடத் துன்பம்
சலிப்பது போன்றே பிறகு - சிலிர்க்கும்
நிலையது காட்டிடும் வாழ்வது கூறிடும்
என்றும் நினைவே சுகம்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.