http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 180

இதழ் 180
[ ஆகஸ்ட் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
Sharda Temple- Kashmir
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 2
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 85 (உள்ளத்தில் உள்ளேனா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 81 (குயிலிசை போதுமே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர்- 5
இதழ் எண். 180 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ச. கமலக்கண்ணன்

பாடல் 80: மைக்குழற் செறிவன்ன காதல்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
長からむ
心も知らず
黒髪の
乱れてけさは
物をこそ思へ

கனா எழுத்துருக்களில்
ながからむ
こころもしらず
くろかみの
みだれてけさは
ものをこそおもへ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: சேடிப்பெண் ஹொரிகவா

காலம்: கி.பி 12ம் நூற்றாண்டு.

பேரரசர் ஹொரிகவாவின் மகன் பேரரசர் தொபாவின் பட்டத்தரசி தமாக்கோவின் உதவியாளராக இருந்தவர் இவர். இத்தொடரின் 77வது பாடலை (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!) இயற்றிய பேரரசர் சுதொகுவின் வளர்ப்பு அன்னை. கி.பி 1142ல் பேரரசர் சுதொகு பதவியிறக்கம் செய்யப்பட்டபோது தான் கட்டிய ஹோகொங்கோயின் கோயிலிலேயே இவர் புத்தமதத்தைத் தழுவித் துறவியானார். ஹோகென் கலவரத்தின் முடிவில் தோல்வியடைந்த பேரரசர் சுதொக்கு சனுக்கி மாகாணத்துக்குக் கடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறந்த கவிஞரும் ஆவார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 66 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையிலும் 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

பாடுபொருள்: காதலின் நிலையற்ற தன்மை

பாடலின் பொருள்: நேற்றிரவு மிகவும் மகிழ்வாக இருந்ததைத் தொடர்ந்து என்னை விட்டுப் பிரியவே மாட்டேன் என்று கூறுகிறாய். நேற்றிரவு என் கருங்கூந்தலில் ஏற்பட்ட சிக்கல்கள் எப்போது அவிழும் என்று தெரியாததுபோல் உன் அன்பும் எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியாது.

அரண்மனைக் காதல்கள் குறுகியகால வாழ்வைக் கொண்டவை என்பதை உணர்த்தும் இன்னோர் எளிய பாடல். மனைவியின் அல்லது காதலியின் வீட்டில் இரவு வந்து தங்கும் கணவன் அல்லது காதலன் காலையில் தன் வீட்டுக்குச் சென்றதும் மகிழ்வை வெளிப்படுத்தும் கவிதையைத் தூதாக அனுப்புவர் என்று முன்பு சில பாடல்களில் பார்த்தோமல்லவா? அதுபோல் அனுப்பப்பட்ட ஒரு கவிதைக்கான மறுமொழிதான் இப்பாடல்.

ஜப்பானிய இலக்கியங்களில் கருங்கூந்தல் என்பது சிக்கலான மனநிலைக்கு உவமையாகக் கூறப்படுகிறது. இடைக்கால இலக்கியங்களில் அவ்வளவாக இவ்வுவமை பயன்படுத்தப்படாவிட்டாலும் பிற்காலத்தில் 19ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற கவிஞரான யொசானோ அகிக்கோவுக்குப் பின் பெருமளவில் வழக்கத்திற்கு வந்தது.

வெண்பா:

இரவினில் சேர்ந்து மகிழ்ந்திட உந்தன்
வரவினில் துய்த்தே விரிப்பில் - பரவிடும்
மைக்குழற் சிக்கல் அவிழ்வதறி யார்போல்
எதுவரை வாழும்உன் அன்பு?

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.