http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 180

இதழ் 180
[ ஆகஸ்ட் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
Sharda Temple- Kashmir
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 2
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 85 (உள்ளத்தில் உள்ளேனா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 81 (குயிலிசை போதுமே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர்- 5
இதழ் எண். 180 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ச. கமலக்கண்ணன்

பாடல் 82: கண்ணீரே வாழ்வாக!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
思ひわび
さてもいのちは
あるものを
憂きにたへぬは
涙なりけり

கனா எழுத்துருக்களில்
おもひわび
さてもいのちは
あるものを
うきにたへぬは
なみだなりけり

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் அட்சுயோரி

காலம்: கி.பி 1090-1179.

ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த இவர் தலைநகரில் அரண்மனையில் அதிகாரியாக இருந்தாலும் இலக்கியத்தின்பால் கொண்ட ஆர்வத்தால் நடுத்தர வயதில் பணியிலிருந்து விலகி முழுநேரப் புலவராக ஆனார். பின்னாளில் ஒரு சிறந்த புலவராக ஆகவேண்டும் என்று இளவயதில் சுமியோஷி கோயிலுக்குத் தினந்தோறும் சென்று வேண்டியபடியே இருந்தாராம். எண்ணற்ற பாடல்போட்டிகளில் கலந்துகொண்டும் தானே போட்டிகளை நடத்தியும் வந்தார். வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உடல்நலம் குன்றியிருந்தபோதும் கவிதைப் போட்டிகளுக்குச் சென்று பாடல்கள் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வாழ்வின் கடைசிச் சில வருடங்கள் இவர் துறவறம் பூண்டிருந்தார்.

இவரது நண்பர் ஷுன்செய் என்பவர் சென்சாய்ஷூ என்றொரு காதல் பாடல்கள் தொகுப்பை உருவாக்கியபோது இவரது 18 பாடல்களை அதில் சேர்த்திருக்கிறார். பின்னர் அட்சுயோரி இறந்தபிறகு ஷுன்செய்யின் கனவில் வந்து நன்றி தெரிவித்ததாகவும் பதிவு செய்திருக்கிறார். இவரது தனிப்பாடல் திரட்டு இன்று நமக்குக் கிடைக்காத நிலையில் ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 41 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: வாழ்வின் துயர் கூறுதல்

பாடலின் பொருள்: துயரங்கள் தொடர்கதையாக இருக்கும் வாழ்க்கை முடிந்துவிடும் என நினைத்தால் வடிந்துவிடும் என நினைத்த கண்ணீர் வடியாமல் பெருகுவதைப் போல வாழ்வும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்வின் துயரைக் கூறும் எளிமையான பாடல். காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் எழுதப்பட்ட பாடல் என்று முதலில் தோன்றினாலும் வாழ்வின் வெறுமையைப் பாடுகிறது என்பதே பொருத்தமாக இருக்கிறது. பல்வேறு நேரங்களில் இவர் பல பாடல்களைப் புனைந்திருப்பதால் இப்பாடல் ஒருவேளை இவரது இளவயதில் ஏற்பட்ட காதல்தோல்வியைக் கூறுகிறதோ என்று தோன்றுவதையும் தவிர்க்க இயலவில்லை. காதல் பாடல்களின் தொகுப்பான சென்சாய்ஷூ தொகுப்பிலும் இப்பாடல் இடம்பெற்றிருப்பதால் உரையாசிரியர்கள் இவ்வாறு கருதுகிறார்கள்.

வெண்பா:

மாறுதல் வேண்டா மனிதரின் வாழ்வது
பாறுதல் ஒன்றே வழியெனக் - கூறுவர்
ஆயின் முடிவறு கண்ணுகு நீர்போல்
முடிவற்று நீள்வது வாழ்வு

பாறுதல் - அழிதல்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.