http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 57

இதழ் 57
[ மார்ச் 24 - ஏப்ரல் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

அழிவின் விளிம்பில் தொல்லோவியங்கள்
Killing - with a difference
திருமுன் நிற்கும் திருமலை
திரும்பிப்பார்க்கிறோம் - 29
Thirumeyyam - 4
கங்கையின் மறுவீட்டில் - 3
கழுகுமலை பயணக் கடிதம் - 2
அவர் - பகுதி 9
Silpi's Corner-09
தாமிர சாஸனம்
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 2
எரிகிறதடி நெஞ்சம்! எங்கே அவர்?
இதழ் எண். 57 > சுடச்சுட
திருமுன் நிற்கும் திருமலை
மு. நளினி

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், நாயக்க மன்னர்கள் இவர்தம் புரப்பால் சிறந்த கலைக்கோயிலாக உருவெடுத்துள்ளது. இத்திருக்கோயில் வளாகத்தில் களஆய்வின்போது கண்டறியப்பட்ட புதிய தரவுகள் கணக்கற்றவை. அவற்றுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைச் சுடச்சுட உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருக்கிறோம்.

அங்கயர்க்கண்ணி என்று பதிகங்களிலும் காமக்கோட்ட நாச்சியார் என்று கல்வெட்டுகளிலும் மீனாட்சி என்று நாயக்க மன்னர்கள் காலந்தொட்டும் அறியப்படும் இறைவி திருமுன் வளாகத்தின் முன்னுள்ள சுற்றில், நுழைவாயிலுக்குச் சற்று முன்பாக உள்ள தரையில் சற்றே தேய்ந்த நிலையில் சிற்பத்தொகுதியொன்றை அண்மையில் கண்டறிந்தோம்.

நாயக்க மன்னர் தம் தேவியருடன் இறைவியை வணங்கியநிலையில் அத்தொகுதியில் காட்சிதருகிறார். நடுவில் மன்னரும் அவரது இருபுறத்தும் பக்கத்திற்கொருவராய்த் தேவியரும் உள்ளனர். ஆடையமைப்பு அவர்களை நாயக்க அரச மரபினராய்க் காட்டுகிறது. வலப்புறத்தே இளையவர் ஒருவர் உடனிருக்கிறார். அவரது கைகள் மன்னர், தேவியர் போல் வணக்க முத்திரையில் இல்லை. கையமைப்புக் கொண்டு பார்க்கும்போது தாளம் போன்ற இசைக்கருவியொன்றை இயக்குபவர் போலத் தெரிவதால், இசையும் பாடலுமாய் உடன் சென்ற ஓதுவாராய் அவரைக் கருதமுடியும்.



அங்கயர்க்கண்ணி, சொக்கர் வளாகத்தில் பல நாயக்கப் பேரரசர்கள் திருப்பணிகள் செய்திருந்தபோதும் குறிப்பிடத்தக்க அளவில் இக்கோயில் வளாகத்தைச் செம்மைப்படுத்தியவர், திருமலை நாயக்கரே. தேவியருடனான அவருடைய திருமேனி கோயில் வளாகத்திலும் முக்குறுணிப் பிள்ளையார் திருமுன் திருவாசியிலும் புதுமண்டபத்திலும் அழகர்கோயிலிலும் பலவாய்க் காணக்கிடைக்கின்றன. ஒப்பீட்டு முறையிலும் திருப்பணிகளின் அடிப்படையிலும் இங்கே தரையில் வணங்கி நிற்கும் அரசரைத் திருமலை நாயக்கராகவே கொள்ளமுடியும்.

தரையில் கிடந்தால் வருவோர் போவோரெல்லாம் மிதித்துச் செல்வர் என்பதறிந்தும் இறைக்கோயில் வருவோரின் திருவடி முத்திரையினும் பெருமைக்குரியது வேறொன்றில்லை எனக் கருதியோ என்னவோ, திருமலை, தம் தேவியருடன் அங்கயர்க்கண்ணியின் திருவாயில் எதிரில் மீனாட்சியின் அருள் வேண்டி வருவோரை எல்லாம் வரவேற்பவர் போல வணங்கி நிற்கிறார்! பல திருக்கோயில்களில் மலைப்படிகளில், இறைத்திருமுன்களில் அடியவர் சிற்பங்களை விழுந்து வணங்கிய நிலையில் காணமுடிந்தாலும், இங்கு மன்னரே தேவியருடன் நின்று வணங்கி வரவேற்கும் அரிய காட்சி உள்ளத்தை அழுத்தத்தான் செய்கிறது. திருமலையின் இறைப்பற்றுக்கு எல்லையே இல்லை!
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.