![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 56
![]() இதழ் 56 [ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அருள்தரு மீனாட்சியம்மன் கோயிலில் வரலாறு வழங்கும் விளக்குத் தோரணங்கள் மூன்று கண்டறியப்பட்டன. மூன்றில் இரண்டு, இறைவன் திருமுன் இருக்கும் இடத்திற்கு முன்னுள்ள மண்டபங்களிலும் ஒன்று அங்கயர்க்கண்ணியாக இருந்து மீனாட்சியாக வடமொழிப்படுத்தப்பட்ட இறைவியின் திருமுன் முன்னுள்ள மண்டபத்திலும் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று விளக்குத் தோரணங்களுமே கல்வெட்டுப் பொறிப்புகளுடன் உள்ளமை களஆய்வில் கண்டறியப்பட்டது. கம்பத்தடி மண்டப விளக்குத் தோரணப் பொறிப்பு 2009 பிப்ருவரி 7ம் நாள் ஆய்வின்போது அறியப்பட்டது. சிற்பக் களஞ்சியமாக விளங்கும் கம்பத்தடி மண்டபத்தின் முகப்பில் விளங்கும் விளக்குத் தோரணம் முதல் தோரணத்தினும் அளவில் சிறியது. மூன்றடுக்குத் தாங்கல்களுடன் மேலெழுந்து பிறை வளைவு பெற்றுக் கீர்த்திமுக உச்சியில் முடியும் இத்தோரணத்தின் இருபுறத்தும் பக்கத்திற்கு ஒன்றாகக் காட்டப்பட்டுள்ள தாவு யாளிகள் அகல்கள் பெற்றுள்ளன. தாங்கலிலும் மேற்பகுதியிலும்கூட யாளிகள் பெற்றுள்ள இவ்விளக்கு மாலையின் வலத் தாங்கலின் கீழ்ப்புறத்தே கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. ![]() ஜெய வருடம் மாசிமாதம் 12ம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டின் கீழே முத்தலை ஈட்டி பொறிக்கப்பட்டுள்ளது. விசுவநாத நாயக்கர் மரபைச் சேர்ந்த திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் செய்தளித்த இந்த மகரதோரண விளக்கைக் கல்வெட்டு, 'புவனேசுவர விளக்கு' என்று பெயரிட்டு மகிழ்கிறது. இவ்விளக்குத் தோரணம் செய்விக்கப்பட்ட காலத்தில் இக்கோயிலின் பாரபத்தியமாகப் பணியில் இருந்தவர் நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியார் ஆவார். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |